பெண்ணே அதை நீ அறிவாயோ
பாழாய் போன
என் இரவுகளுக்கு
காரணம் நீதானடி
பெண்ணே
அதை நீ அறிவாயோ
என் தூக்கத்தை
உன் நினைவுகளால்
பறித்து
என் கனவுகளை
சக்கரையாய் கரைத்து
எனக்கு கண்ணீரையும்
வேதனையையும்
மட்டும்
பரிசாகத் தந்தாயே
பெண்ணே
அதை நீ அறிவாயோ ..?
ஏனோக் நெஹும்