அந்தி வானம் சிவந்திருப்பது ஏன்

அன்று ஒரு நாள்....
அந்தி நேரத்தில் - என்
காதலிக்காகக் காத்திருந்தேன் ...

வழக்கம்போல் என்னவள்
என்னை சந்திக்க வந்தாள்.

அது ஒரு மலைப்பிரதேசம்.

யாராலும் கண்டுபிடிக்க முடியாத
இடம் அது .

என்னவளைப்பார்த்து
எனக்கு என்ன கொண்டுவந்தாய்?
என்று கேட்டேன்..

அவள் கைகளை விரித்து
ஒன்றுமில்லை என்றாள்.

நான் கொண்டுவந்திருக்கிறேன்
தரட்டுமா என்றேன் !...

எங்கே கொடுங்கள்
என்றாள் ...

நான் அவளை
அருகழைத்து - ஒரு
முத்தமிட்டேன்

வெட்கத்தால் அவள் முகம்
சிவந்து போனது .

கடலின் நீல நிறத்தை வாங்கிப்
பிரதிபலிக்கும் வானம் -
அன்று முதல் ....
அந்தி நேரத்தில்....
என்னவளின் கன்னச்சிவப்பை வாங்கிப்
பிரதிபலிக்கத்தொடக்கிவிட்டது.

எழுதியவர் : மா. அருள்நம்பி (4-Nov-14, 1:43 pm)
பார்வை : 166

மேலே