மா. அருள்நம்பி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மா. அருள்நம்பி
இடம்:  கூடங்குளம்
பிறந்த தேதி :  27-Aug-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Nov-2014
பார்த்தவர்கள்:  236
புள்ளி:  39

என்னைப் பற்றி...

அர்த்தமுள்ள வார்த்தைகளிலும் அழகான தமிழ் எழுத்துகளிலும் கரைந்து காணமல் போனவன்.
என்னைத் தேடிக்கண்டுபிடிக்க முயன்று கொண்டிருப்பவன். அதனால் இன்னும் நான் ஒரு சராசரி மனிதன்தான்.
அறிவில் இன்னும் நான் மலராத மொட்டு.
வயதில் ஐம்பதைக் கடந்துவிட்ட தமிழ்ச் சிட்டு.

என் படைப்புகள்
மா. அருள்நம்பி செய்திகள்
மா. அருள்நம்பி - Rose அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2019 10:20 pm

நற்றமிழ் பிரித்து எழுது ?

மேலும்

நல்ல + தமிழ் 14-Oct-2019 3:25 pm
நண்பா Rose நற்றமிழ் என்பதற்கு அழகான விளக்கம் நண்பர் அருள் நம்பி அளித்துள்ளார் காண்க 05-Jul-2019 11:47 pm
நற்றமிழ் = நன்மை + தமிழ். இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத் தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும். செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும். வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர். முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ் இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல் இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர். மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர். 05-Jul-2019 12:18 am
7 :
Nanmai + Thamizh 04-Jul-2019 4:12 pm
மா. அருள்நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2019 5:45 pm

வழுக்கை

அன்பு நடமாடும் கண்களைக் கொண்ட அவள் சாலை ஓர இளநீர் கடைக்கு சென்றாள்.

இளநீர் ஒன்று வெட்டிக் கொடு என்றாள் .

கடைக்காரன் தண்ணிய வேணுமா? வழுக்கையா வேணுமா னு கேட்டான்.

வழுக்கையா ஒண்ணு வெட்டு என்றாள் .

அவன் சிரித்துக் கொண்டே இளநீரை வெட்டினான்.

வழுக்கையை கேட்டதற்கு அவன் ஏன் சிரித்தான் னு அவளுக்கு புரியல............

வெடிக்க கொடுத்ததும் வாங்கி கொண்டாள்.

'ஸ்ட் ரா ' கொடு என்றாள்.

கொடுத்தான்.

வாங்கிப் போட்டு உறிஞ்சினாள் ...

இளநீர் காலியானதும் கடைக்காரனிடம் கொடுத்தாள்.

கடைக்காரன் வாங்கி அந்த இளநீர்க் காயை இரண்டாக வெட்டினான்.

உள்ளே வழுக்கை லேசாக இருந்தது.

மேலும்

மா. அருள்நம்பி - Mohan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2019 11:28 am

தனக்காக ,வாழ்பவன் மனிதனா அல்லது சமூதாயத்துக்காக வாழ்பவன் மனிதனா,,
அறத்தோடு வாழ்பவன் மனிதனா,
அறம் தவறி வாழ்பவன் மனிதனா,
அடுத்தவனை பழிசுமத்தி வாழ்பவன் மனிதனா,
மனித நேயத்துடன் வாழ்பவன் மனிதனா,
முகமூடி அணிந்து வாழ்பவன் மனிதனா ,

மனிதனாக பிறந்து மனிததன்மை இழப்பவன் மனிதனா,,,,

மனிதனாக பிறந்த அனைவரும் ,
வருங்காலத்தில் நான் மனிதன் இல்லை..என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை......

மேலும்

இன்றைய காலத்தில் ஏமாற்றி வாழத் தெரிந்தவன் பணக்கார மனிதன் ஏமாறி போய் வாழ்பவன் ஏழை மனிதன் இரண்டினையும் செய்பவன் அப்பாவி(களின்) மனிதன் 18-Aug-2019 4:39 am
உறுதி மனம் கொண்டு, பிறரை மதித்து,தன் மேல் நம்பிக்கை கொண்டு அன்பைத் தருபவனே உண்மையான மனிதன்! 16-Jun-2019 12:54 am
முகத்தில் அழுக்கு ,சாடுவதோ முகம் பார்க்கும் கண்ணாடியை ? "யார் மனிதன்?"என்பதை திருத்தி "நான் மனிதனா?" என்று வினாவி உங்களுடன் இணைத்து விடை தேடுகின்றேன் நான். வாழ்க்கை மீது உள்ள அதீத பற்றினாலும் , வாழ்க்கையின் நிற்சயமில்லா தன்மையினாலும்,வாழ்க்கையில் பாதுகாப்பு இன்மையாலும் ஏற்படும் பயத்தினால் தன்னுள் குழப்பமான குணாதிசயங்களை வளர்க்கின்றான் மனிதன்.என்று தனது உள்ளுணர்வை பின்பற்றி விருப்பு வெறுப்பைக் கடந்து தெளிவான மனதுடன் வாழ்க்கையை அதன் வழியில் முழுமனதுடன் ஏற்று அவனுள் உறைந்திருக்கும் பயத்துடன் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றானோ அன்று இதுவரை குரங்காய் இருந்தவன் தன்னுள் மனிதனை உணர்கின்றான். தன்னை தன் வாழ்வை முழுமையாக நேசித்து வாழும் மனிதன் நிட்சயமாக சகல எதிர்மறை சக்திகளையும் மனதார ஏற்று தன்னால் இயன்றவரை நேர்மறை எண்ணத்தால் நட்புறவு பேணி மனிதனாக வாழ முயற்சிக்கின்றான். சிந்தனைக்கு விருந்தாக அமைந்த உங்கள் வினாவிற்கு நன்றி. 05-Jun-2019 11:54 pm
மா. அருள்நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2019 7:32 pm

"வரம்"

"இல்லறம்" சிறந்திட
இதயத்து ஆசைகள் நிறைந்திட
இத்தனை வரம் வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன் ....

அவனோ -
அதனை வரம்
அளிப்பதற்கு இல்லை ...

என்னிடம் இருப்பதோ
"துறவரம்" -
ஏற்றுக்கொள்வாய் பக்தனே
என்றான்.

மேலும்

மா. அருள்நம்பி - மா. அருள்நம்பி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2018 8:21 pm

                                                                            மகளிர் தின வாழ்த்து….( புதுக்கவிதை) -                                                                                                                                           மா.அருள்நம்பி

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 கல்வியிலும்  கேள்வியிலும்  
 காலமறியும்   கணக்கிலும் 
 பல்நோக்குச் சிந்தனையிலும்
 மெல்லினமே  நுழைந்து விட்டாய்  
மேன்மைகள்  பெற்றுவிட்டாய்!   

 பொன்னிலும் பொருளிலும் 
 போகத்திலும் யோகத்திலும் 
 விண்ணிலும்  மண்ணிலும் 
 விவேகத்தைக் காட்டிவிட்டாய்
 வீரத்தை நாட்டிவிட்டாய்!   

 எண்ணற்கரிய  சாதனைகள் 
 எண்ணியெண்ணிச்   செய்தே 
 மண்ணுலகோர் புகழ்ந்திட 
 மதிப்பைப் பெற்றுவிட்டாய் 
 மாதர்குலத் திலகமாகிவிட்டாய்!   

 பெண்ணே! உன்னையன்றி 
 பேரண்டங்கள் சுழல்வதிலை.. 
 கண்ணே உன்னையன்றி 
 கடவுளும் தோன்றுவதில்லை…. 
 என்னே உன்சக்தி!  என்னே உன்சக்தி!   

பெண்ணுருபாகமாய்ப் 
பேரின்பம் காட்டியவளே! 
கண்ணுருமணிபோல் 
காண்கின்றேன் உன்னையான்…  
மாதர்குலத் திலகங்களே! மங்கையர்களே!
 மண்ணுலகு உள்ளவரை வாழ்க! வாழ்கவே!      

மேலும்

மா. அருள்நம்பி - Santhosh அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2018 7:14 pm

தமிழ் என்றால் என்ன?

மேலும்

DRAVIDAM வடமொழிச் சொல் . தென் புலத்தை குறிப்பதான சொல் த்ராவிடம் வட மொழி மூன்றாவது த வின் ஒற்றெழுத்தில் துவங்குகிறது. தமிழ் மொழியில் சொற்கள் ஒற்றெழுத்தில் துவங்காது. THA DA விற்கும் வேறுபாடு தெரியாமல் சொன்ன விசித்திர ஆராய்ச்சி. அப்படியானால் த்ராவிடம் என்ற வட சொல்லியிருந்தா தமிழ் பிறந்தது ? 09-Mar-2018 3:43 pm
திராவிடம் என்னும் சொல் - திரிமிளம், திரிமிழ், தமிள் என்றெல்லாம் திரிபு பெற்று மருவி இறுதியில் தமிழ் என்றானதாகக் கூறுகிறார்கள். 08-Mar-2018 11:21 pm
தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாரதி தாசனின் கவிதையைப் படியுங்கள் . தமிழ் என்றால் என்னவெல்லாம் என்று விளக்கமாகவே சொல்லியிருப்பார் . 07-Mar-2018 7:35 pm
A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages is a book on comparative linguistics written by Robert Caldwell, the Bishop of Tirunelveli. இந்த புத்தகம் வாங்கி படியுங்கள். வாழ்த்துக்கள் 07-Mar-2018 7:20 pm

                                                                            மகளிர் தின வாழ்த்து….( புதுக்கவிதை) -                                                                                                                                           மா.அருள்நம்பி

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 கல்வியிலும்  கேள்வியிலும்  
 காலமறியும்   கணக்கிலும் 
 பல்நோக்குச் சிந்தனையிலும்
 மெல்லினமே  நுழைந்து விட்டாய்  
மேன்மைகள்  பெற்றுவிட்டாய்!   

 பொன்னிலும் பொருளிலும் 
 போகத்திலும் யோகத்திலும் 
 விண்ணிலும்  மண்ணிலும் 
 விவேகத்தைக் காட்டிவிட்டாய்
 வீரத்தை நாட்டிவிட்டாய்!   

 எண்ணற்கரிய  சாதனைகள் 
 எண்ணியெண்ணிச்   செய்தே 
 மண்ணுலகோர் புகழ்ந்திட 
 மதிப்பைப் பெற்றுவிட்டாய் 
 மாதர்குலத் திலகமாகிவிட்டாய்!   

 பெண்ணே! உன்னையன்றி 
 பேரண்டங்கள் சுழல்வதிலை.. 
 கண்ணே உன்னையன்றி 
 கடவுளும் தோன்றுவதில்லை…. 
 என்னே உன்சக்தி!  என்னே உன்சக்தி!   

பெண்ணுருபாகமாய்ப் 
பேரின்பம் காட்டியவளே! 
கண்ணுருமணிபோல் 
காண்கின்றேன் உன்னையான்…  
மாதர்குலத் திலகங்களே! மங்கையர்களே!
 மண்ணுலகு உள்ளவரை வாழ்க! வாழ்கவே!      

மேலும்

மா. அருள்நம்பி - kokila makan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2018 12:47 am

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

இலக்கண விதிகளின் படி குறள் வெண்பாவில் அதிகபட்சம் இருக்கக்கூடிய 20 அசைகள்
இந்தக் குறளில் உள்ளன.

இவ்வாறு 20 அசைகள் உள்ள குறள் வெண்பா இது ஒன்று மட்டுமே என்பதாலும் , இது
கல்வியின் அவசியத்தைச் சொல்லுவதாலும் திருவள்ளுவர் கல்வி தான் தலையாயது என்று
சொல்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா?

மேலும்

நன்றி நண்பரே வள்ளுவர் போன்ற "ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் " தங்கள் கருத்துக்களை அன்போடு கூறுவார்கள் ,அல்லது சினத்தோடு கூறுவார்கள். ஒருவன் எவ்வளவு மோசமான குற்றம் செய்தவனாயினும் அவனை ஏளனம் செய்வதோ அல்லது இழிவு படுத்துவதோ அவர்களின் நோக்கமாக இருக்காது என்ற எனது நம்பிக்கையே இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் போனதற்குக் காரணம் . கல்லாமை என்பது சூது, பிறன்மனை விழைதல் , கள்ளுண்ணுதல் போன்ற குற்ற்றங்களை விட மோசமான குற்றமா என்ன? அவர்களை எல்லாம் இழிவு செய்யாதவர் கல்லாத குற்றத்திற்காக ஒருவனை இழிவு செய்வார் என்பதை நம்ப முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஒருவன் கல்லாமல் இருப்பதற்கு , அவன் மட்டும் முழுக் காரணமல்ல , அவனது குடும்பத் சூழ்நிலை , பொருளாதாரம் போன்றவைகளும் காரணமாக இருக்கக் கூடும் என்ற சமூக உண்மையின் பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சிந்திக்கையில் அவனை ஏளனம் செய்வதோ இழிவு படுத்துவதோ அவரது நோக்கமாக இருக்கும் என்பதை மேலும் நம்ப முடியவில்லை. இழிவும்மை என்பது ஏற்கெனவே நான் சொல்லியது போல் அக உணர்வு நிலை சார்ந்த கருத்து . (subjective point of view ). " 09-Mar-2018 9:46 am
நீங்கள் ஏற்கினும் ஏற்காவிடினும்" அக உணர்வு நிலை சார்ந்த கருத்து . (subjective point of view ). " என்ற சிறப்பு விளக்கம் தரினும் இக்குறட்பாவின் வெளிப்படையான பொருள் கவிஞனின் ஆதங்கமே ஏளனமே ! அருள் நம்பியாரின் quatation mark விளக்கத்தைப் படித்த போது மேலும் இக் குறட்பாவை உற்று நோக்கினேன் . {நன்றி நம்பியார் ) சாந்துணையும் (சாகும் வரையும் ) ----வள்ளுவர் இங்கு உம்மையே பயன் படுத்துகிறார் . உம்மையில் உயர்வும்மை இழிவும்மை என்றுண்டு. நீங்கள் அறிவீர்கள் . இங்கு இது இழிவும்மை . சாகும் வரையிலுமா படியாமல் அல்லது கல்லாமல் இருப்பது ? என்ற வினாவில் ஆதங்கமும் ஏளனமும் தொக்கியல்ல வெளிப்படையாகவே நிற்கிறது. I TOTALY AGREE WITH ARUL NAMPI 'S POINT OF VIEW . நான் விவாதிக்க வில்லை . இது நண்பர் நண்பியரின் கலந்துரையாடலில் பொருள் தெளிவுபட விழையும் கருத்துரையாடலே ! 09-Mar-2018 8:21 am
நன்றி நண்பரே ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வள்ளுவர் ஆதங்கத்தோடும் , மனிதனை ஏளனத்தோடும் நோக்கி இயற்றி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ----அருள் நம்பி சொல்லியிருப்பது சரியே ! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்தக் கருத்தில் நான் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இதைத் தவறென்று சொல்ல மாட்டேன் , ஏனெனில் இது அக உணர்வு நிலை சார்ந்த கருத்து . (subjective point of view ). என்னுடைய பதிவும் இந்த வகையைச் சார்ந்ததே. 08-Mar-2018 10:28 pm
நன்றி நண்பரே ( எனது சார்பில் மட்டுமல்லாமல் , இங்கு பதிவிட்ட நண்பர்கள் சார்பிலும்) 08-Mar-2018 9:45 pm
மா. அருள்நம்பி - kokila makan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2018 12:47 am

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு

இலக்கண விதிகளின் படி குறள் வெண்பாவில் அதிகபட்சம் இருக்கக்கூடிய 20 அசைகள்
இந்தக் குறளில் உள்ளன.

இவ்வாறு 20 அசைகள் உள்ள குறள் வெண்பா இது ஒன்று மட்டுமே என்பதாலும் , இது
கல்வியின் அவசியத்தைச் சொல்லுவதாலும் திருவள்ளுவர் கல்வி தான் தலையாயது என்று
சொல்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா?

மேலும்

நன்றி நண்பரே வள்ளுவர் போன்ற "ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் " தங்கள் கருத்துக்களை அன்போடு கூறுவார்கள் ,அல்லது சினத்தோடு கூறுவார்கள். ஒருவன் எவ்வளவு மோசமான குற்றம் செய்தவனாயினும் அவனை ஏளனம் செய்வதோ அல்லது இழிவு படுத்துவதோ அவர்களின் நோக்கமாக இருக்காது என்ற எனது நம்பிக்கையே இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லாமல் போனதற்குக் காரணம் . கல்லாமை என்பது சூது, பிறன்மனை விழைதல் , கள்ளுண்ணுதல் போன்ற குற்ற்றங்களை விட மோசமான குற்றமா என்ன? அவர்களை எல்லாம் இழிவு செய்யாதவர் கல்லாத குற்றத்திற்காக ஒருவனை இழிவு செய்வார் என்பதை நம்ப முடியவில்லை. அது மட்டுமல்லாமல் ஒருவன் கல்லாமல் இருப்பதற்கு , அவன் மட்டும் முழுக் காரணமல்ல , அவனது குடும்பத் சூழ்நிலை , பொருளாதாரம் போன்றவைகளும் காரணமாக இருக்கக் கூடும் என்ற சமூக உண்மையின் பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சிந்திக்கையில் அவனை ஏளனம் செய்வதோ இழிவு படுத்துவதோ அவரது நோக்கமாக இருக்கும் என்பதை மேலும் நம்ப முடியவில்லை. இழிவும்மை என்பது ஏற்கெனவே நான் சொல்லியது போல் அக உணர்வு நிலை சார்ந்த கருத்து . (subjective point of view ). " 09-Mar-2018 9:46 am
நீங்கள் ஏற்கினும் ஏற்காவிடினும்" அக உணர்வு நிலை சார்ந்த கருத்து . (subjective point of view ). " என்ற சிறப்பு விளக்கம் தரினும் இக்குறட்பாவின் வெளிப்படையான பொருள் கவிஞனின் ஆதங்கமே ஏளனமே ! அருள் நம்பியாரின் quatation mark விளக்கத்தைப் படித்த போது மேலும் இக் குறட்பாவை உற்று நோக்கினேன் . {நன்றி நம்பியார் ) சாந்துணையும் (சாகும் வரையும் ) ----வள்ளுவர் இங்கு உம்மையே பயன் படுத்துகிறார் . உம்மையில் உயர்வும்மை இழிவும்மை என்றுண்டு. நீங்கள் அறிவீர்கள் . இங்கு இது இழிவும்மை . சாகும் வரையிலுமா படியாமல் அல்லது கல்லாமல் இருப்பது ? என்ற வினாவில் ஆதங்கமும் ஏளனமும் தொக்கியல்ல வெளிப்படையாகவே நிற்கிறது. I TOTALY AGREE WITH ARUL NAMPI 'S POINT OF VIEW . நான் விவாதிக்க வில்லை . இது நண்பர் நண்பியரின் கலந்துரையாடலில் பொருள் தெளிவுபட விழையும் கருத்துரையாடலே ! 09-Mar-2018 8:21 am
நன்றி நண்பரே ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வள்ளுவர் ஆதங்கத்தோடும் , மனிதனை ஏளனத்தோடும் நோக்கி இயற்றி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ----அருள் நம்பி சொல்லியிருப்பது சரியே ! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இந்தக் கருத்தில் நான் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இதைத் தவறென்று சொல்ல மாட்டேன் , ஏனெனில் இது அக உணர்வு நிலை சார்ந்த கருத்து . (subjective point of view ). என்னுடைய பதிவும் இந்த வகையைச் சார்ந்ததே. 08-Mar-2018 10:28 pm
நன்றி நண்பரே ( எனது சார்பில் மட்டுமல்லாமல் , இங்கு பதிவிட்ட நண்பர்கள் சார்பிலும்) 08-Mar-2018 9:45 pm
மா. அருள்நம்பி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2017 1:30 pm

கடவுள் -நம்மைக்
கடந்தும் -நமக்கு
உள்ளேயும் இருப்பவர்.

கட + உள் = கடவுள் ...
ஆக- இச்சொல்லாய்
கடவுள் இருக்கிறார்...

நமக்கு உள்ளேயும் இருக்கிறார்
நமக்கு வெளியேயும் இருக்கிறார்..

மின்சாரத்தை
கம்பி வழியாக செலுத்தலாம்
விளக்கின் மூலமாக வெளிச்சமாகப் பார்க்கலாம் ...

தொட்டுப்பார்த்தால்
"ஷாக் அடிக்கும்" ...

வெளியே கடவுளை பார்ப்பதென்பது
விளக்கின் வெளிச்சம் பார்ப்பது போல் ...

தொட்டுப்பார்ப்பதென்பது -உள்ளே
கம்பி வழியாக செல்லும் மின்சாரத்தை
தொட்டுப்பார்ப்பதுபோல் ..

நீங்கள் கடவுளை
எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்?
உள்ளேயே? வெளியேயா!

மேலும்

மனிதனாக வாழ முயன்றால் மனிதத்தை கற்றுக்கொள்ளலாம் மனிதத்தை பேணும் மனிதன் நிச்சயம் வேதத்தை மதிப்பவனாகவே இருப்பான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 10:18 pm
"நீங்கள் கடவுளை எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்? உள்ளேயே? வெளியேயா!".... . நல்ல கேள்வி நட்பே...... ஆனால் வெளிச்சம் எல்லாஇடத்திலும் சமாக இருந்தால் மகிழ்ச்சி.... 12-Nov-2017 2:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே