கண்ணீரில் கரைந்த என் காதல்

காரிருளின் கைகளிலே
கைதியென வாழ்ந்திருந்தேன்
வேதனை நீக்கி
விடிவெள்ளியென
நீ வந்தாய் ..
இன்னல்கள் நான்
மறந்தேன்
இன்பத்தில்
திளைத்திருந்தேன்
பெற்றவர் வந்தனர்
சகுனி என
காதலை ஆடினார்
பகடை என
இறைவனும் ஏனோ
சதி செய்தான்
என்னையும் உன்னையும்
பிரித்து வைத்தான்
நீயும்
மற்றோர் மங்கைக்கு
மாலையிட்டாய்
மண்ணில் என் காதலை
புதைத்து விட்டாய்
மறக்க நினைக்கின்றேன்
முடியவில்லை
ஆனாலும்
மனதால் மணமக்களை
வாழ்த்துகின்றேன்
முடிந்த என் காதல்
கதை இதுவே
மொத்தத்தில் என் வாழ்க்கை
கண்ணீரிலே.....!!!