தாய் மடியில் குழந்தையாவோம்
![](https://eluthu.com/images/loading.gif)
இறகை விரித்தால் பறக்கலாம்
இனிய உலகை ரசிக்கலாம்
கவலை மறந்தால் சிரிக்கலாம் - இந்தக்
கருத்தை மனதில் பதியலாம்
விழியில் எதற்கு கண்ணீர் ? என்னோடு
விரைந்து பறந்திட வாரீர்.....
வழியில் முட்கள் கிடக்கும் - அதை
வாரி எடுத்து கூடுகள் அமைப்போம்.....
குத்தும் என்ற கவலை வேண்டாம் - மீண்டும்
கொட்டும் மழையில் அது பூ பூக்கும்......
அழுதுக் கழிக்க வாழ்க்கை இல்லை - நாம்
அமைதியாய் துயில இயற்கை தாய் மடி.......!!