தமிழுணர்வு

தமிழப் பேச முடியல
தமிழப் பேச முடியல
தமிழ்நாட்டுல பிறந்திருந்தும்
தமிழ்மொழிய படிச்சிருந்தும்
தமிழப் பேச முடியல.
பன்மொழிய படிச்சவருதான் பாரதியாரு
பாரினிலே தமிழப் பத்தி என்ன சொன்னாரு
யாமறிந்த மொழிகளிலே இனிமையினாரு
தேமதுர தமிழோசை பரப்பனுன்னாரு
தமிழ்நாட்டுல பன்துறையில தமிழும் இருக்குது
தமிழிருக்க பிறமொழிதான் ஆட்சி செய்யுது
தமிழருன்னா தமிழை முதலில் கத்துக்கவேணும்
தமிழ் படிச்சு பன்மொழியும் தெரிஞ்சுக்கவேணும்
உலகமெங்கும் தமிழறிவை வளர்த்திடவேணும்
உள்ளபடி தமிழுணர்வே ஆட்சி செய்யோணும்!

எழுதியவர் : முருக.கவி (7-Nov-14, 12:10 pm)
சேர்த்தது : மு. கவிதாராணி
பார்வை : 202

மேலே