காதல் விவாகரத்து

உன் மனைவித் தலையில்
அப்பளம் நொறுக்கினாய் ரசித்தப்படி !!
நொறுங்கியது என் இதயமும்
என்று அரியாததெப்படி??

காணப்படாத அருந்ததியை காட்டினாய்
உன் துணைவிக்கு !!
கானல் நீராய் ஏன் நீ மாறி போனாய்
பாவி எனக்கு!!

காசி ராமேஸ்வரம் போவதாய்
உன் மச்சினனிடம் சொல்லி சென்றாய் விளையாட்டாக!!
பாதாளத்திற்கே கொண்டு சென்றாய் என் வாழ்வை
உன்னை காதலித்ததன் பயனாக !!

பசுன்னெய் ஊற்றி, தீ வளர்த்து
சத்தியம் செய்து திருமணம் உனக்கு !!
முகனூலில் இவைகளை கண்டதால்
காதல் விவாகரத்து எனக்கு !!

சாஸ்த்திரங்கள் சம்பிரதாயங்களாம்!!
கண்களில் வலி இல்லாமல்
புன்னகையில் குறைவில்லாமல்
புகைப்படத்திற்கு இசைந்தப்படி நிறைவேற்றினாய்!!

எனக்கு சொல்
எந்த சாஸ்த்திரத்தை கேட்டு
என்னை பிரிந்தாய் என்று ??
எந்த சம்பிரதாயத்தை அறிந்து
என்னை மறந்தாய் என்று ??
உன் திருமண பந்தம்
என் காதல் விவாகரத்தில் !!

எழுதியவர் : சௌந்தர்யா (14-Nov-14, 12:51 am)
பார்வை : 117

மேலே