தாயின் அன்பு முத்தம்

பக்குவமாய் கறக்கப்பட்ட பசும்பால்!
பஞ்சத்தில் மண்ணை தொடும் முதல் துளி!
தன் பிறவி பலனை அடைந்த நிம்மதி!
ஈரேழு உலகையும் ஈடாய் கொடுத்ததும்!
உதறி தள்ளும் உணர்வு!
தன்னுலகை மறந்து தத்தளிக்கும் மகிழ்ச்சி!
இனி வேறேதும் வேண்டா, நீ மட்டும் போதும் என்கிற மகிழ்ச்சி!
இதை விட அதிகமாய் அடைந்திராத பேரின்பம்!
இது ஒன்று பரிசாய் கிடைக்குமானால் எதையும் வெல்வேன்!
இப்பாக்கியம் கிடைக்கதென்றால் பிறந்தும் பயனில்லை
மாய்ந்திடுவேன் இந்நொடியே!!!

எழுதியவர் : மு. பாலவேலாயுதம் (15-Nov-14, 9:06 pm)
Tanglish : thaayin anbu mutham
பார்வை : 187

புதிய படைப்புகள்

மேலே