பாலவேலாயுதம் மு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலவேலாயுதம் மு
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  19-Mar-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Oct-2014
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  15

என்னைப் பற்றி...

கலைமகள் வனத்தில், கவிதை சோலையுள், செடியாக முளைத்திருகிறேன்.......மரமாக விரும்புகிறேன்"

என் படைப்புகள்
பாலவேலாயுதம் மு செய்திகள்
பாலவேலாயுதம் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 11:24 pm

விழுந்தது போதும் எழுந்திடடா தமிழா!
ஈழத்தமிழனே தவிர ஈனத்தமிழனல்ல நீ!
அடிமையொன்றும் அல்ல...வீரத்தின் அடையாளம் நீ!
நிமிர்ந்து நடைபோட்டு நிரூபித்திடு நின் புகழை!!!

மேலும்

பாலவேலாயுதம் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 11:18 pm

தெற்கில் உதித்து வடக்கில் வலம் வந்து
உலகிற்கு ஒளி தந்த சூரியனே!
நின் ஆராய்ச்சி வானுலகிற்கு வேண்டுமென
எடுத்து கொண்டானோ ஈசன்?
மன்றாடி கேட்கிறோம்.....
மறுபிறவி வேண்டுமென பிரம்மனிடம்!
இன்னொருமுறை கலாமை கருவில் சுமக்க
தவமிருகிறாள் தமிழன்னை!!!

மேலும்

பாலவேலாயுதம் மு - Gopinath Ravirajan அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

வணக்கம் அன்பர்களே,

உங்களுக்கு தமிழ் பதித்த ஆடைகள் அணிய விருப்பமா, இலவசமாக பெற தயாராக உள்ளீர்களா ?

உடனே பங்குபெறுவீர்:

தமிழ் T -shirt வாசகம்/ வடிவம் போட்டி - "வில்வா"

1. தமிழ் வாசகங்கள் சமர்ப்பிக்கலாம்.

2. தமிழ் ஆடை வடிவங்கள் (Designs) சமர்ப்பிக்கலாம்.

வாசகங்கள் கவிதையாகவும் இருக்கலாம், பெருவாரியான மக்களை ஈர்க்கும் படியாக இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு - +91-9551789459.

மேலும்

குறுந்தகவல் கொடுத்த 15 பேருக்கும் பரிசுசீட்டு அனுப்ப பட்டுள்ளது. தங்களுக்கு வரவில்லை எனில் விரைவில் தங்கள் மின்னஞ்சல் முகவரியை +91-9551789459 என்ற எண்ணுக்கு அனுப்பவும். 25-Nov-2015 11:30 pm
வணக்கம் தோழர்களே, தாமத்திற்கு மன்னிக்கவும். பங்கு பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் நோக்கில் - 250ரு. மதிப்புள்ள பரிசு சீட்டு தரவுள்ளோம். விருப்பமுள்ளோர் தங்கள் மின்னசலை - +91-9551789459 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பவும். indru மாலைக்குள் அனைவருக்கும் மின்னஞ்சல் கிடைக்கும். உடனே செய்தி அனுப்பவும். 25-Nov-2015 11:28 am
ஐயா, முதல் 3 இடங்கள் பெற்றவர்களின் பெயர்களை எங்கே பார்க்கலாம்? 17-Aug-2015 6:59 pm
வணக்கம் நண்பர்களே, பரிசு அறிவிக்க பட்டுவிட்டது. முதல் 3 இடங்கள் பெற்றவர்களுக்கு தமிழ் T-shirt அனுப்பிவைக்கப்படும். பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக பரிசுசீட்டு வழங்கப்பட உள்ளது அதனை பெற தாங்கள் சமர்ப்பித்த படைப்பின் விவரங்களோடு support (at) vilvaclothing(dot)in என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிவைக்கவும். நன்றி. - வில்வா. 14-Aug-2015 3:32 pm
ஜின்னா அளித்த எண்ணத்தில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2015 11:26 pm

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)

மேலும்

அருமையான ஆழமான குறுங்கதை 13-Aug-2015 1:17 pm
நானும் எழுதியவரை தேடி விரைந்தேன் இறுதிக்கு ... ஏமாற்றம் . நல்ல சிந்தனை கொண்ட சொல்வீரன் . அவனது வரிகளில் அன்னையின் தரிசனம் . நன்றி தோழரே .. பகிர்த்துகொண்டமைக்கு. 24-Jun-2015 11:21 pm
எழுதியவர் சிந்தனைக்கு என்ன சொல்ல ...அவ்வளவு அழகு ...இதை இங்கே தந்தமைக்கு நன்றிகள் பல .... 23-Jun-2015 6:51 pm
மிக்க நன்றி தோழரே.. எழுதியவருக்கே சேரட்டும் வாழ்த்து அனைத்தும்... 27-Feb-2015 2:11 am
பாலவேலாயுதம் மு - ஜின்னா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2015 11:26 pm

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)

மேலும்

அருமையான ஆழமான குறுங்கதை 13-Aug-2015 1:17 pm
நானும் எழுதியவரை தேடி விரைந்தேன் இறுதிக்கு ... ஏமாற்றம் . நல்ல சிந்தனை கொண்ட சொல்வீரன் . அவனது வரிகளில் அன்னையின் தரிசனம் . நன்றி தோழரே .. பகிர்த்துகொண்டமைக்கு. 24-Jun-2015 11:21 pm
எழுதியவர் சிந்தனைக்கு என்ன சொல்ல ...அவ்வளவு அழகு ...இதை இங்கே தந்தமைக்கு நன்றிகள் பல .... 23-Jun-2015 6:51 pm
மிக்க நன்றி தோழரே.. எழுதியவருக்கே சேரட்டும் வாழ்த்து அனைத்தும்... 27-Feb-2015 2:11 am
பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2014 5:37 pm

பாவத்தின் சம்பளம் ,
மரணமாம் ..

உன் வயிற்றில் ,
பிறந்த பாவத்திற்கே ..
பரிசாக ,
மரணம் தந்தாயோ ..???

வயிற்றில் உள்ளது ,
பெண் என்று அறிந்தே ..
இடையில் கலைத்தால் ,
உன் உயிர் போகும் என்றே ..
பத்து மாதம் ,
பத்திரம் காத்து ..

கொன்று ,
தூக்கி எறிந்தாயோ - என்னை
கொசுக்கள் மொய்க்கும் ,
குப்பை தொட்டிதனில் ..???

நீ ,
பெண் என்பதையும் ..
உன்னை பெற்றவள் ,
பெண் என்பதையும் ..
உன்னுடன் பிறந்தவள் ,
பெண் என்பதையும் மறந்தே ..???

வயிற்றிலிருந்து ,
வெளியேறிய அசதியில் ..

என் ,
பிஞ்சு விரல் கொண்டு ..
உன் ,
மார் தடவினேன் ..
தீண்டத்தகாதவள் போல ,
தர மறுத்துவிட்டாய் - சரி

உன் ,

மேலும்

நீ , பெண் என்பதையும் .. உன்னை பெற்றவள் , பெண் என்பதையும் .. உன்னுடன் பிறந்தவள் , பெண் என்பதையும் மறந்தே ..??? மிக அருமை நட்பே ..... பல பெண்கள் தங்களையே சில நேரங்களில் மறப்பதால் வரும் இளம்பிஞ்சுகள் ........... உங்கள் கவி பலரிடம் கொண்டு சேர்க்கட்டும் இந்த தவறுகள் குறைக்கப்படும்.......... சிறந்த படைப்பு......... 21-Jan-2015 9:11 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல ... 21-Jan-2015 1:15 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல ... 21-Jan-2015 1:14 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் தோழரே .. நன்றிகள் பல ... 21-Jan-2015 1:14 pm
பாலவேலாயுதம் மு - நிவாஸ் கண்ணன் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Dec-2014 10:53 pm

இளைஞர்களிடையே தமிழ் உணர்வு குறைந்ததற்கு இவர்களில் யார் காரணம்?

மேலும்

வேலை வாய்ப்பின்மை 08-Feb-2015 5:50 pm
சமுதாயமே karanam 21-Dec-2014 11:38 am
பாலவேலாயுதம் மு - ஜெபகீர்த்தனா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 9:50 pm

பார்த்ததில் பிடித்தது !

மேலும்

கடந்த போட்டில் எனது படைப்பின் நாம் எங்கே போகிறோம்? என்ற தலைப்பினை நிணைவு கூறுகிறது தங்களது படம்! 21-Dec-2014 11:36 am
நடத்துங்க... 20-Dec-2014 10:22 pm
பாலவேலாயுதம் மு - மலர்91 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2014 11:18 am

திரைப்படங்களைப் பாருங்கள். அவற்றில் நல்ல கருத்து மிகக் குறைந்த அளவில் தான் இருக்கும். அவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பாருங்கள் ரசியுங்கள் அத்தோடு மறந்துவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள். முன்னேறும் வழியைப் பாருங்கள் . சினிமாவால் உருப்பட்டவர்களைவிட கெட்டவர்களே அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறித்தனமாக இருக்கக் கூடாது.. பாலபிஷேகம் முதலியவற்றைச் செய்து அவர்களை உயர்த்தக் கூடாத உயரத்துக்கு உயர்த்த வேண்டாம். அவர்கள் உங்களால் பிழைக்கிறார்கள். நீங்கள் அவர்களால் பிழைக்கவில்லை

மேலும்

நன்றி நண்பர் ராம் வசந்த் அவர்களே 21-Dec-2014 6:37 pm
சிந்திக்கும் திறனை இழந்தவர்களை என்ன செய்வது தோழமையே? 21-Dec-2014 6:36 pm
நன்றி தோழமையே 21-Dec-2014 6:33 pm
சுருக்கமாக சொன்னாலும் ஒவ்வொரு வரியும் உணர வேண்டிய உண்மை ஐயா . தொடருங்கள் ... 21-Dec-2014 2:13 pm
பாலவேலாயுதம் மு - selvaravi87 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2014 10:35 am

குடிச்சா, அரசாங்கத்துக்கு வருமானம்...
போதைல வண்டி ஓட்டுனா போலீஸுக்கு வருமானம்...
அடிபட்டா ஆஸ்பத்திரிக்கு வருமானம்...


குடிக்றவனுக்கு செலவும் அவமானமும்

மேலும்

பாலவேலாயுதம் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 11:20 pm

உலகை மறந்து உறக்கம் தேடும் தோழா!
உறக்கம் களைந்து மேலெழுந்து
சோம்பல் உடைத்து சுயம் நாடு!
கடமை உணர்ந்து கடைபிடித்து
உன்னை அறிந்து உயரே எழு!
இலக்கைக் குறித்து திட்டமிட்டு
திட்டத்தின் வழி செயல்படு!
இடரும் பிழைக்கு பிழைத்து
தடுமாறும் தவறுக்கு தப்பித்து
நேற்றை மறந்து நாளை நோக்கி
வீரமாய் நடை போடு தோழா!!
ஓங்கிய சிகரத்திற்கும் இமயமாய் காட்சியளிப்பாய்!!!

மேலும்

சிந்தனை சிறப்பு... 17-Nov-2014 12:12 am
அருமை அருமை உத்வேகம் தரும் நற்கவிதை..! 16-Nov-2014 11:31 pm
பாலவேலாயுதம் மு - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2014 10:01 pm

தோல்வியிலும் துன்பத்திலும் துவண்டு கிடக்கும் தோழனே!
துரத்துவது துயரமானாலும் மரணமானாலும் துணிந்து நில்!
எத்தனைமுறை விழுந்தாலும் நம்பிக்கையுடன் எழுந்து நில்!
காற்றை கிழித்துக்கொண்டு உயரப்பறக்கும் கழுகென உயர்ந்து செல்!
வெறியுடன் வேட்டையாடும் புலியென பாய்ந்து செல்!
வென்ற பின்பும் வேட்கை குறையாமல் உன் வெற்றியை உரக்கச்சொல்!
வெற்றியை ருசிக்கும் போதுதான் உன் வியர்வையும் இனிக்கும் உனக்கு!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
vairamuthusankar

vairamuthusankar

sriperumbudur

இவரை பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே