வாழ்க்கை வாழ்வதற்கு

உலகை மறந்து உறக்கம் தேடும் தோழா!
உறக்கம் களைந்து மேலெழுந்து
சோம்பல் உடைத்து சுயம் நாடு!
கடமை உணர்ந்து கடைபிடித்து
உன்னை அறிந்து உயரே எழு!
இலக்கைக் குறித்து திட்டமிட்டு
திட்டத்தின் வழி செயல்படு!
இடரும் பிழைக்கு பிழைத்து
தடுமாறும் தவறுக்கு தப்பித்து
நேற்றை மறந்து நாளை நோக்கி
வீரமாய் நடை போடு தோழா!!
ஓங்கிய சிகரத்திற்கும் இமயமாய் காட்சியளிப்பாய்!!!

எழுதியவர் : மு. பாலவேலாயுதம் (16-Nov-14, 11:20 pm)
பார்வை : 107

மேலே