சிந்தனை துளிகள்

அடர்ந்த காடுகள் அல்ல வாழ்க்கை !
ஆனந்தமான பரந்த வானம்

இன்னல்கள் இங்கும் அங்கும்
இடையே தாமரை மலர்கள் !

உயர்ந்த சிந்தனைகளால்
உயர்வு நிச்சயம் !

ஊர்ந்து சென்றாலும்
ஊக்கத்தை கை விடாதே !

எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது !

விழுந்தாலும்
எழுவோம் வெல்வோம் !

ஏளனங்களை
எள்ளி நகையாடு!

துன்பங்களின்
இரு மருந்துகள்

காலம் !
மௌனம் !

இயற்கையுடன் ஒத்து வாழ் நீ
இயற்க்கை காட்சியாய் ரசிக்கப்படுவாய் !

மனிதனாய் இரு !
மனித நேயத்துடன் செயல்படு!

எண்ணங்களே
ஏற்றமிகு வாழ்க்கை !

=கிருபா கணேஷ் =

எழுதியவர் : kirupaganesh (15-Nov-14, 10:27 pm)
Tanglish : sinthanai thulikal
பார்வை : 298

மேலே