200- நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னுடைய 200 வது கிறுக்கலை,
முதல் கிறுக்கலில் இருந்து
துவங்க நினைக்கிறேன் !

நீ என்னை மறக்க நினைக்கிறாய் !
ஆனால், நான் மறந்துவிட்டேன் ..
உன்னைத்தவிர அனைத்தையும் !

என்னை மறந்துவிட்டாயோ
என நினைத்தே
உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன் !

உன் காதலை மறந்தாலும்,
என் காதலை மறக்க
முடியாது உன்னால் !

என்னை மறந்து ,
வேறு வாழ்க்கை
அமைத்துகொள் என்று
தூது விடுகிறாய் ..

தூது விடுவதற்கு
முன்பு நினைத்தாயா ?

நீ என்னை வேண்டாம்
என்று கூறியபோது,
உன்னிடம் நான் யாரையும்
தூது அனுப்பாததின்
காரணத்தை ????

நினைத்திருந்தால்,
கூறி இருக்க மாட்டாய்
மறந்து விடு என்று !

உன்னால் என்னிடம்
கூற முடியாது,
என் காதலை
அறிந்தவள் நீ !

நீ கூறினாலே,
மறக்க மாட்டேன், இதில்
யாரோ ஒருவர் சொல்லி
நினைப்பதற்கும் மறப்பதற்கும்
காதல் என்ன ???????

உன் வாழ்க்கை
உன் குடும்பம் என

உனக்காக யோசித்தாயே ?

எனக்காக யோசிக்க
இன்று தான்
நேரம் கிடைத்ததோ ??

என் நேரம் அனைத்தும்
உனக்காக ஒதுக்கிவிட்டேன்..

என்றும்
உன் நினைவுகளே
என் வாழ்க்கை,

என்ற நிலையில் நான் !

நான் நானாகவே
இருக்க விரும்புகிறேன் !

நீயும் நீயாகவே
இருக்க கற்றுக்கொள் !

எழுதியவர் : s . s (18-Nov-14, 8:43 pm)
பார்வை : 271

சிறந்த கவிதைகள்

மேலே