அஞ்சல
=============
அஞ்சல
============
சத்தமில்லாமல்
கை தட்டி கொண்டிருந்தது
என் இமைகள் ,
கருவிழியில்
உன் முகத்தை
பதிந்தபடி ,
கார் மேகம் சூழ்ந்த உன்
கூந்தலை என் விரல்கள் வருட
நினைத்தது ,
புவியிர்ப்பு விசை
இறுகி பிடித்து கொண்டது
உன் அருகில்
என்னை அனுப்பமால்,
நீ வாசல் தெளிக்கும்
நீரை சேகரித்து
நீராட விரும்புகிறேன்,
ஒவ்வொறு சொட்டு
நீரிலும் உன் கைரேகை
பதிந்திருப்பதால் ,
உன் தலையில் இருக்கும் வரை
எந்த பூவும்
வாடுவதில்லை ,
இறந்தவர்களுக்கு
அங்கே தான் உயிர்
கிடைக்கிறதாம் ,
உன்னை காதலித்ததால்
என்னவோ அழாத
என் கண்களும்
நீரை சிந்துகிறது ,
இது வருத்தத்தில் அல்ல
என் கண்ணீரும் உன்னை
காண விரும்பகிறது ,,,,,,,,,
என் அஞ்சல அவ .

