கல்யாணக் காதல்

கல்யாணக் காதல்

உன் வாசல் தேடி வந்தேன்
உன் வாசம் பட்டு மறைந்தேன்
தயங்கி நின்றேன் தனியாக பேச
மயக்கிப் போனாயே என் மனைவியாக

உன் மூச்சுக்கற்றால்
என்னை மூழ்கடிதத்தையே
உன் சுவாசத்தால்
என்னை சுவாசிக்க வைத்தாயே

எனக்காக உன்னை மாற்றினாய்
உனக்காக வாழ்கிறேன்
என்னையே மறந்து

பேச முடியும் என்று நினைத்தேன்
ஆனால் முடியவில்லை
பேசி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் முடிக்கவில்லை

விழிக்கும் நேரமோ
உறங்குகிறது
உறங்கும் நேரமோ விழிக்கிறது

அந்த காதலும் காதலிக்கிறது
நம் காதலைப் பார்த்து
கணவன் மனைவியாகும்
நாள் வருமா
காத்துக்கொண்டிருக்கின்றேன் அன் நாளுக்காக ...............


கவிஞ்சன் கௌதம்

எழுதியவர் : கவிஞ்சன் கௌதம் (22-Nov-14, 6:04 pm)
பார்வை : 141

மேலே