காமத்தின் பிடிதனில் கலங்கி நிற்கிறேன்

காமத்தின் பிடிதனில்
கலங்கி நிற்கிறேன்
சமூகம் கண்டு ....

இருண்ட கரையிலே
உருண்டைத்தேள்கள்!
வீரியம் இழந்த
விந்தக
கொடுக்குகள்!
ஈ மொய்த்து
விழும்,
கருகட்டிகள்!
அதை,
நாவால்
நக்கித்துடைக்கும்
நாய்கள்!
எடுத்துத்திங்கும்
எச்சில்
புழுக்கைகள்!
சிரங்குபட்டு
சீழ் வடியும்
அண்டகங்கள்!
ஊடல்
சஞ்சலத்தால்
பிதுங்கிய
இரத்தங்கள்!
பாவம்,
பருவம் தெரிக்காத
பட்டினிப்பிஞ்சுகள்!
கைகள் புரட்டும்
கலவிப்புத்தகங்கள்!
உரோமத்துக்கும்
உதிரத்துக்கும்
சாமச்சங்கடங்கள்!
காதல்
உரிமைக்கும்,
காம
உரிமைக்கும்,
போராடும்
சாமக்கனவுகள்!
நிர்வாணம்
நீதிபெற,
உருவான இனங்கள்!
பாலினச்சேர்க்கையில்
ஆள் இனம்தெரியாத
ஆபாசங்கள்!
உப்புக்கடற்கரையில்
உள்வாய் கவ்வும்
ஊதாரி முத்தங்கள்!
காதல்கரிமம்,
காமஉரிமம் பெற்ற
சட்டங்கள்!
நித்திரை யிழந்து,
ஊன் ஒடிந்த
முத்திரைகள்!
நிர்வாணமெத்தையில்
நீந்த
கர்வம் வைத்த
காலக்கணிதங்கள்!
அம்மணகுட்டையில்
அர்ப்பநாரைகள்!
ஆதாம் ஏவாள்
அதீத புனிதங்கள்,
ஆடைபோட்டதில்
ஆசை பொட்டலங்கள்!
வைப்பாட்டிகட்டில்கள்
குப்பைத்தொட்டில்கள்!
உடலைத்தேடும்
முடலைகள்!
நரைத்த கொட்டைகள்,
நக்கிடத்தேடும்
விரைத்தபெட்டைகள்!
உடுக்கள்
உடைத்துக்கொண்டு,
உக்கிரம் தேடும்
காம வடுக்கள்!
கட்டிக்கொண்டு
கையைத்திங்கும்
கர்ப்பவெறிகள்!
உயிரை
உறிஞ்சிக்குடிக்கும்
உச்சகட்ட
உறுப்புகள்!
உடலை குடித்தும்
சுடலை தேடும்
வெறுப்புகள்!
ஆட்டுமந்தைகளின்
ஆபாசதோற்றங்கள்!
ஆகையால்,
அன்றைய தேவனின்
தாய்மை வீக்கங்கள்!
அய்யகோ!
அச்சிட்டு பதித்த
ஆணிச்சிலுவையிலும்,
அண்டம் நுழைக்கும்
அருவறுப்புகள்!
மலடுகளாய்
மரணிக்கும்
வியாபாரச்சிறைகள்!
பணமுதலைகள்
பிச்சுத்தின்ற
பிணமிதவைகள்!
பாவத்தட்டிகளாய்
எரியும்
காமகட்டிகள்!
குனிந்து எடுக்கும்
கைகுட்டையை
குறுகுறுவென பார்க்கும்
குருடர்கள்!
தாய்ப்பால்
உண்டபோது,
தாய்மீதே
தன்னுடல் கோர்த்தவர்கள் அவர்கள்!
தாய்மைக்கும்,
ஈனம்
விழைத்த
விக்கிரகங்கள்!
அர்த்தம்புரியாத
அந்தரங்க
தனிமைகள்!
மாளிகைவேசத்திலே
காரிகைச்சுவைகள்!
அரியணை
ஆசையில்,
அரசர்களின்
அவலஓசைகள்!
பதவி ஆசையில்
மாதவிகளின்
மேசைகள்!
நங்கை
நக நுனியைக்கண்டும்,
தங்கை
தலை குனிய பார்க்கும்,
தாடி வேசிகள்!
கருகிய
கற்சிலையில்
மிருக ஸ்பரிசங்கள்!
மிருகத்தோடும்
பருவம்
புணர்ந்த
புத்திரர்கள்!
பாவம்!பாவம்!
கபாலமுட்டையில்
காமகட்டிகள்
பெறுத்து விட்டதோ!
தூங்கும் தொட்டிலில்
தூக்கம்
துறந்துவிட்டதோ!
துரோகிகள்!
துரோகிகள்!
அர்ச்சுனை
தட்டிலிலும்
ஐந்துரூபாய்
வைத்து
அழைப்பீரோ,
அந்த
அறக்கடவுளையும்
உன் கட்டிலுக்கு.....
அலியின் உடல்,
சிவனின் ஊடல்!
அதிலும் ஓர் உடல்
அதுதான் ஊடல்!
ஊடல்
தெய்வீகத்திற்கு
உரியதும்,
தாய்மைக்கு
உரியதும் ஆகும்
அதை
கலங்கப்படுத்திவிட்டது
சில மனித குளம்...

எழுதியவர் : ரா (23-Nov-14, 9:24 pm)
பார்வை : 1925

மேலே