ருத்ரா நாகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ருத்ரா நாகன் |
இடம் | : புதுகை ,பொன்னமராவதி |
பிறந்த தேதி | : 09-Apr-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 978 |
புள்ளி | : 372 |
எனது கண்கள் இரண்டு அக்னிக்குழிகள்.. நான் கந்தகக்கவிதைக்குள் குடியேறிய கவிஞன்.....
சமூகம் எனது புத்தக மேசை.....
சமூகத்தின் மீது கல்வீச எனக்கு விருப்பமில்லை....
சமூகம் என் மீது எரிந்த கற்களையே எடுத்து வீசுகிறேன்...
என் மாணவர்களை
அடித்து ஒடுக்கிய
இந்த நாட்டில் இனியும்
"வந்தே மாதரம்" என்று
சொல்வது
"தன் மூத்திரத்தை தானே
குடிப்பதற்கு சமம்"
(மெரினா என்ற ஏறுதழுவல் போர்க்களம்)
அலைபேசி:
85249 31003
ஜென்மயாசகம்....!!
நரகம் புனிதமாகு மென
யென்
மனநிலத்தை பார்வையிட
வந்த
சொர்க்கவாசிகள் புரிந்திருக்க
கூடும்......!!!
யென் உடற்குருதிக்கு
அப்பால் ஓர் நதி ஓடும்....
அந்நதிக்கரையில் நீந்தி நான்
வெளி வருகையில்
உடல் முழுதிலும் அம்புகள்
பாய்ந்து அகாலமாய்
நான் இறந்திருக்க கூடும்....
நான் கதறக் கதற
யென் கண்ணைக் கொத்தித்தின்ன வரும் உன் ஞாபகக்கழுகுகள்,
எனைச்சுமந்து கொண்டு போய்
ஓர் அமானுசிய இருளில்,
இரகசிய உணவாக்கி
இராத்திரி வேளை மட்டும்
கதறக்கதற கொல்லும்.....
எனைக்காவு வாங்கிய
உன் இதயக்காட்டெறிக்குள்
மீண்டும் மீண்டும்
இடறி விழுந்தே யென்
கண்ணீர்ப் பிஞ்சுகள்
பலியாகக் கூடும்..
கம்பர் போய்
பார்த்தார்....
வீடு பூட்டியிருந்தது.
அப்பர் தேவர்
சுந்தரர்
மூவரும் போய்
பார்த்தனர்....
வீடு
பூட்டி யிருந்தது...
மனைவி வாசுகி
போய் பார்த்தாள்...
பூட்டு
உடைந்து கிடந்தது...
அய்யோ
என்ற படி,
வீட்டிற்க்குள்ளே
போய்
பார்த்தாள்.....
வெளுத்த நிறத்தில்
ஒரு வெள்ளையன்...
பதறியபடி
நீ
யாரென்றுகேட்டாள்....
அதற்கு அவன்
ஜி.யு.போப்
என்றான்....
என்ன வேண்டும்
என்றாள்....
ஏழு வார்த்தையில்
ஏழாவது பிறவிக்கு
அர்த்தம்
தேடிவந்தேன்
என்றான்....
பூட்டை யுடைக்க
காரணம் கேட்டாள்...
வெளியில் எங்கும்
ஏடு
திறந்திருக்கிறது...
ஆனால்
அர்த்தம்
தாய் தந்தை
தாத்தா பாட்டி
அண்ணன்,அன்னி
தம்பி,தங்கை
தாய்மாமன்,அத்தை
பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி
அக்கா மாமா
மச்சான் மாப்பிள்ளை
அங்காளி பங்காளி
மாமனார் மாமியார்
பொண்ணுகொடுத்தவர்
பொண்ணுஎடுத்தவர் ஒன்னுவிட்ட சொந்தம்
அன்னியின்
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
பெரியப்பா மகனுடைய
மாமாவுடைய அண்ணனுடைய
மகளுடைய
மாமியாருடைய
கொளுந்தனுடைய
மனைவியுடைய
தம்பியுடைய
அப்பத்தாவுடைய
மூத்த அக்காவுடைய
மச்சானுடைய
பாட்டிக்கு முப்பாட்டன்.
இப்படி எல்லோருடைய
ஆசிர்வாதத்தோடும்
எழுத்து இணையதளத்தில்
இணைந்து வாழும்
அனைத்து தோழர்
தோழிகளின் சார்பாகவும்
இன்று
அப்பா என்ற பதவி
அடைந்த
நண்பர் ஜெகதீஸ்வரனும்
அந்த பதவியை
பெற்றுக்கொடுத்த
என் ஞாபக
அடுக்கில்
அடுக்கிய
கோப்புகள்
கலவாடப்
பட்டுவிட்டதோ?
யோசித்துப்
பார்கின்றேன்
யாரால் இது?
போகட்டும்
கவலையில்லை
வாங்கிய
கடன்
கொடுத்த
கடன்
ஏமாற்றிய
காதல்
துன்பந்தரும்
பசி
பட்டியல்
துடைக்கப்பட்டதோ
யார் வேலை
இது?
போகட்டும்
கவலையில்லை
கண் மூடினால்
இப்படியொரு
சுகமெனில்
கடவுள் ஏன்
விழிப்பை
கொடுத்தான்?
கேள்வி
வருகின்றதே
எப்படி இது?
கண்திறக்க
நினைக்க
காணாமல்
போனது
கேள்வி
போகட்டும்
கவலையில்லை
எங்கிருக்கின்றேன்
நான்?
மனநல
மருத்துவமனை
மறதிநோயாம்
எனக்கு
நன்றி
கடவுளே
இல்லை
இல்லை
நன்றி
மர
திரு.அகன்( புதுவை):
தளத்தில் என்னை ஊக்குவித்த
முதல் ஆசான்.
கவிச்சக்கரவர்த்தி.....
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா(நாகர்கோவில்):
இலக்கியத்தையும் புதுக்கவிதையையும் இணைத்து
யாவருக்கும் புரியும் படி
எழுதும் தளத்தின் என் முதல்
நண்பன்.....
கருத்து வேறுபாடு வந்தது..
காணவில்லை
கே.எஸ்.கலை(இலங்கை):
மிகச்சிறந்த கவிஞர்
இலங்கையிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு
என்னுடன் பேசிய சிறந்த
நண்பர்....தளத்தில்
ஏதோ சண்டை போட்டோம்.....
எதற்காக சண்டை போட்டோம்
என்று மறந்தே போனது...நட்பு வட்டத்தில் இருந்து எனை நீக்கியும் விட்டார்......
புலமி அம்பிகா:
தமிழ் எழுத்துக்களை தட்டியெழுப்பி
விளையாடும் எழுத
திரு.அகன்( புதுவை):
தளத்தில் என்னை ஊக்குவித்த
முதல் ஆசான்.
கவிச்சக்கரவர்த்தி.....
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா(நாகர்கோவில்):
இலக்கியத்தையும் புதுக்கவிதையையும் இணைத்து
யாவருக்கும் புரியும் படி
எழுதும் தளத்தின் என் முதல்
நண்பன்.....
கருத்து வேறுபாடு வந்தது..
காணவில்லை
கே.எஸ்.கலை(இலங்கை):
மிகச்சிறந்த கவிஞர்
இலங்கையிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு
என்னுடன் பேசிய சிறந்த
நண்பர்....தளத்தில்
ஏதோ சண்டை போட்டோம்.....
எதற்காக சண்டை போட்டோம்
என்று மறந்தே போனது...நட்பு வட்டத்தில் இருந்து எனை நீக்கியும் விட்டார்......
புலமி அம்பிகா:
தமிழ் எழுத்துக்களை தட்டியெழுப்பி
விளையாடும் எழுத
மனம் ரசிக்கும் சோலைக்குள்
இரண்டு காதல்கள் நடக்கின்றன....!!
. ஒன்று கூடி வந்த காதல் ..
. மற்றொன்று ஓடிவந்த காதல் ..
கூடிவந்த காதல்
சில நாட்களில்
தாடியோடும்போகலாம்
தாலியோடும் போகலாம்...
ஓடிவந்த காதல்
ஒருமணி நேர
கூலியொடும் போகலாம் .... .!!!!!
ஒரு மாதகால தாலியோடும் போகலாம்...
இப்படிக்கு
காதல் விழுதுகள்
கவி யென்பது
உணர்வைத் தூண்டவேண்டும்
உணர்ச்சிப்பெருக்கெடுத்து
அழகாய் தோன்ற வேண்டும்....
சமூகத்தை தன் வார்த்தை சவுக்கு கொண்டு
சுழற்ற வேண்டும்.....
காதலின் புரிதலை
காதலின் பக்குவத்தை
காதலின் ஆழத்தை
காதலின் வயதினை
அழகாய்ச் சொல்ல
வேண்டும்......
நியாத்தை எழுதி
நீதி சொல்லித் தர வேண்டும்....
கன்னத்தில் அறைவதை
வார்த்தைகளால் அழுத்த
வேண்டும்......
தன் கவிதை வாசிக்கும்
வாசகன் கவிஞனை அவனது ச
தோலில் சுமக்க வேண்டும்....
கவிதை காட்சியாய்
தோன்ற வேண்டும்.....
குடி+அரசு=குடிகார அரசு.
குடிகாரர்களைக் கொண்ட
அரசுக்கு குடியரசு தேவையில்லை.....
ஒரு ,குவாட்டர் அரசு போதும்....
வாழ்க குடி...வளர்க அரசு...
குடியால் கெட்ட மக்களுக்கும்
குடியை ஊத்திக்கொடுக்கும்
தமிழக அரசியலுக்கும்
குடியரசு தின வாழ்த்துக்கள்.....
பசிக்கும் பட்டினிக்கும்
பஞ்சமில்லா நாடு...!
வல்லரசுக் கனவுகளை
குப்பையிலே போடு...!
பணக்கார முதலைகளின்
பட்டியலைத் தேடு...!
என்று தான் அழியும்
எந்நாட்டின் வறுமைக்கோடு...!
பணமென்னும் பூவினிலே
அமரும் ஏழை வண்டு...!
கொடுக்கினிலே விரட்டும்
பெரும் பணக்கார நண்டு...!
கழிவறையே இல்லாத
வீடு பல உண்டு...!
கடவுள் கூட உறங்குகிறான்
கண்விழித்துக் கொண்டு...!
வெள்ள வேட்டி வெள்ள சட்ட
போடுறாங்க கொஞ்சம்...!
சாக்கடைய அள்ளக்கூட
கேக்குறாங்க லஞ்சம்...!
தினக்கூலி பட்டியலில்
எத்தனையோ ஏழை-இதை
தீர்க்காத அரசாங்கம்
நம்மை விடக் கோழை.....
புதிய பாரதத்தை உருவாக்....கலாம் -ஒரு
புண்ணிய பூமியை உருவாக்....கலாம்..
நதிகள் அனைத்தையும் இனைவாக்....கலாம்
நாடுகள் செழிக்க நாம் வழிவகுக்....கலாம் ...
இளைஞர்கள் எழுந்து அணிவகுக்....கலாம்-அவர்கள்
இந்திய நாட்டிற்க்கு புகழ் சேர்க்....கலாம்...
களைகள் சிலவற்றை சேர்ந்தழிக்....கலாம்
கடுமை உழைப்பை நம் கருவாக்....கலாம்
கனவினை மெதுவாய் செயலாக்....கலாம்-பிறர்
கருத்துக்கள் பல கொண்டு புதிதாக்....கலாம்..
நினைவினைக் கண்கொண்டு தொழிலாக்....கலாம்
நித்தம் நித்தம் அதை நாம் செய்விக்....கலாம்
உழைப்பைக் கொஞ்சம் காசாக்....கலாம்-இதை
ஊருக்கெல்லாம் தெரிவிக்....கலாம்...
பிழைப்புக்கு வழிகள் பல கிட