எதிர்பார்த்து காத்திருப்புடன்

அமைதியிழந்த வாழ்வில்
அன்பானதொரு உறவைத்
தர மறுப்பதேன் இறைவா
பட்ட கடன் இன்னும்
எத்தனையோ தீர வழி
தெரியாநிலையில் நான்...
சுமை தரும் நீ
சுமப்பதற்கு பலத்தைத்
தராமல் பல வேசமிடும்
வேசதாரியை உயிரான
உறவாக்கி வலி தந்தது
எதனால் விலக்கிட
முடியாத பந்தபாசம்
விலகிட முடியாமல்
நான் கொண்ட நேசம்...
அதிக அன்பினைக்
கொண்டதால் நிஜம்
எது நிழல் எது என்று
பிரித்தறிய முடியா
தடுமாற்றத்துடன் மனம்
தினமும் வேதனையில்......
விடியும் அந்நாளை
ஏக்கத்துடன் எதிர்பார்த்து
காத்திருப்புடன்....

எழுதியவர் : உமா (29-Nov-14, 11:33 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 145

மேலே