தலைவனும் தொண்டனும்

அப்பாவி வாக்காளன்!!!!!!!!!
++++++++++++++++++++++++
அப்பாவி மக்களிவர்
அடிமையாய் வீழ்ந்திடுவர்
வெளுத்தது பால் என்பர்
வெறுமையாய் நின்றிடுவர்!

வாய்ப் பேச்சில் மயங்கிடுவர்
விளி பிதுங்கிக் கேட்டிடுவர்
வாக்கதனைப் போட்டுவிட்டு
வாய் திறந்து காத்திருப்பர்!

பூனையை புலி என்பார்
நாணலை மூங்கிலென்பார்
அப்படியே நம்பிக் கொண்டு
ஏமாறி அழுதிடுவார்!

தலைவனவன் நாயகனாய்
தரம் வாய்ந்தவனாய்
வெல்ல முன்பு அவன் மிளிர்வான்
இறுதியிலே தந்திர நரியாவான்!

வீடு வாசல் பெரிதில்லை
பிள்ளை குட்டி தேவையில்லை
தேர்தல் முடிந்துவிட்டால்
ஆருதலுக்கு மனைவி தேவை!

கட்சிக் கொடி படபடக்கும்
இவனுள்ளம் குதூகளிக்கும்
கனவெல்லாம் தலைவன் வெற்றி
வீட்டு நிலை பரிதாபம்!

தலைவன் பேச்சு மிக இனிமை
அவன் அழகோ அப்பப்பா
அவன் பின்னால் நாள் முழுதும்
ஐயோ பாவம் அவன் குடும்பம்!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (1-Dec-14, 11:42 pm)
பார்வை : 2923

மேலே