பொம்மை

கோவிலுக்கு செல்லும்
வழியில் தெருக்கடை
பொம்மையை கைநீட்டி
வேண்டுமென்றது குழந்தை ,

வரும்போது
வாங்கிக்கலாம்
என்றார் தந்தை ,

இரவு வீடு வந்ததும்
வாங்க மறந்த பொம்மையை
நினைத்து அழுதது குழந்தை ,

பிள்ளைக்கு பசிக்கிறது
உணவு கொடு என்றார்
தந்தை .

எழுதியவர் : ரிச்சர்ட் (8-Dec-14, 10:18 am)
Tanglish : pommai
பார்வை : 78

மேலே