பேருவகையின் தோற்றங்கள்

உள்ளக் கடலில் இருந்து
மேலெழும்பும் நேசத் துளிகள்
அலைகளாய் ஆர்ப்பரிக்கும்
எண்ணங்களின் சிதறல்
உறவின் பெருமை சொல்ல
விரியும் உணர்வு மலர்கள்
எழுத்திலோ வார்த்தைகளிலோ
விவரிக்க முடியாத
அன்பின் வெளி
ஒவ்வொரு முறையும்
எதிர்கொள்ளும்போதும்
ஒவ்வொரு முறையும்
விடைபெறும்போதும்
கட்டிப் போடும் மௌனம்
ஐம்பூதங்களின் வாழ்த்தின்
வெளிப்பாடு
ஆயிரம் ஜென்ம பந்தத்தின்
பிணைப்பின் முகவரி –
என்னைச் சந்திக்கின்ற வேளைதோறும்
உங்கள் கண்களில் இருந்து தாவும்
ஆனந்தக் கண்ணீர் விளக்கும்
தோற்றங்கள்!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (8-Dec-14, 6:11 pm)
பார்வை : 131

மேலே