உடம்பைப் பேணிடு
ஓடி ஓடி ஓய்வில்லாமல் உழைக்கிறான்,
காசு பணம் சேர்ப்பதிலே குறியாய் இருக்கிறான் ,
சொத்து சுகம் பார்க்கிறான்,
சொந்த சுகம் நினைக்கலை!
காசு பணம் வந்துச்சு,
கஷ்டமெல்லாம் போச்சுதா ?
கவலையெல்லாம் தீர்ந்துச்சா?
உடம்பிலே சீக்கு வந்து சேர்ந்தது தான் மிச்சம் !
உடம்பை பாக்கமலே காசு சேத்தவன்,
சேத்த காசு இப்ப சீக்கப் போக்கவே சிலவாகுது!
சீக்கும் வேண்டாம் ,சிலவும் வேண்டாம்,
தேவைக்கு உழைத்திடு.
சிக்கனமாய் இருந்திடு.
உடம்பைப் பேணிடு .
உயர்வாய் வாழ்ந்திடு .