நிர்வாண கரை

நதியின்
ஆடையை
உருவிக் கொண்டே இருக்கிறது
கரையோரங்கள்
----------------------------------------------------
புதைத்து விட்டு தான்
வந்தோம்
எரிந்து
கொண்டிருகிறது
இதயம்
-----------------------------------------------------
வண்ணம் பூசிக் கொண்ட
பறவை
வானமாகிறது
---------------------------------------------
பாதச் சுவடில்
சருகின் குரல்
வலித்தது
கிளையின் இணுங்கல்கள்
-----------------------------------------------
சுவர்
இல்லை
சித்திரத்தில்
------------------------------------------
கடைசி ஆணியையும்
அடித்து
விட்டார்கள்
இனியாவது
ஒப்புக் கொள்
உன் இறப்பை.....
---------------------------------
கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Dec-14, 10:55 am)
Tanglish : nirvaana karai
பார்வை : 295

சிறந்த கவிதைகள்

மேலே