சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் - 20 ராக ஸுதா ரஸபாநமு சேஸி – ராகம் ஆந்தோளிகா
'ஆந்தோளிகா' என்ற ராகத்தில் அமைந்த 'ராக ஸுதா ரஸபாநமு சேஸி' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.
பொருளுரை:
மனமே! ராகம் எனப்படும் அமுத ரசத்தைப் பருகி மலர்ச்சி பெறுவாயாக.
அது யாகம், யோகம், தியாகம், போகம் இவற்றின் பலன்களைத் தரவல்லது.
ஸதாசிவ (சுத்த சைதன்ய) ஸ்வரூபமான நாதம்.பிரனவம், ஸ்வரம் இவற்றையறிந்தவர்களே ஜீவன் முக்தரென்று இத் தியாகராஜன் அறிவன்.
பாடல்:
பல்லவி:
ராக ஸுதா ரஸபாநமு சேஸி
ராஜில்லவெ ஓ மநஸா (ரா)
அனுபல்லவி:
யாக யோக த்யாக போ க ப ல மொஸங்கே (ரா)
சரணம்:
ஸதா சிவ மயமக் நாதோ ங்கார ஸ்வர-
விது லு ஜீவந்முக்துலநி த்யாக ராஜு தெலியு (ரா)
இது ஒரு பிரபலமான ராகம். பிரபல குரலிசை வித்வான் மதுரை சோமு அநேக கச்சேரிகளில் இப்பாடலைப் பாடக் கேட்டிருக்கிறேன்.
Madurai Somu-Yella Venkateswara Rao-Ragasudarasa- Bombay 1980 என்று வலைத்தளத்தில் பதிவு செய்து இப்பாடலைக் கேட்கலாம்.