மலரும் நினைவுகள் - உதயா

சின்ன சிறுவயதில்
மாந்தோப்பில் மகிழ்சியுடன்
மந்தையாக சென்று
மாங்காய் திருடி மகிழ்ந்தோம்.....
ஆற்று மணலில்
கண்ணாம்பூச்சி ஆடியும்
வீட்டு தெருக்களில் பம்பரம்
கோலி விளையாடி
ஆனந்தத்தில் ஆர்பரித்தோம்...
தென்னை மட்டையில்
கிரிக்கெட் விளையாடினோம்
அறுவடை செய்த வயலில்
கோலாட்டம் விளையாடினோம்
இன்னும் எத்தனை எத்தனை
விளையாட்டை விளையாடினோம்
அத்தனை விளையாட்டையும்
விளையாடிய கடைசி
தலமுறை நாம் தான்
அறிவுதிறன்மிக்க
அத்துனை விளையாட்டையும்
கணினி இன்று
களைத்து மனித
மூளையை களிமண்ணாக்கி விட்டது
வான் அளவு
வைரம் கொடுத்தாலும்
நாம் விளையாடி மகிழ்ந்த
விளையாட்டின் மகிழ்விற்கு
இணையாகுமா..........
மலர்ந்த நினைவுகளை
மனதில் நினைத்தே
பேரின்பம் அடைகிறேன்
இனி மலராத விளையாட்டை
நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்
மலராமல் போவது
விளையாட்டு மட்டுமில்லை
வருங்கால தலைமுறையின்
மதியும் தான்.........