மாமனும் நானும்

உள்ளத்தில் அவன் உருவம்
உணர்வுகளில் அவன் எண்ணம்
உள்ளுக்குள் புதைத்து வைத்த
உன்னத ஆசை இது

விழியோடு விழி மோதி
வெக்கப்பட்டு நான் தலை குனிய
வேட்டி மடித்து கட்டி வீர மாமன்
என் விழி நோக்க

சுற்றி நின்ற தோழியர்
வேடிக்கையாய் என்னை சீண்ட
செல்லமாய் சிணுங்கும் என்னை
சிரிப்பில் அவன் ரசிக்க

கூடி இருந்த உறவெல்லாம்
மாமன் அவனை கேலி செய்ய
கோபம் வந்தது போல அவன்
கெஞ்சலாய் என்னை பார்க்க

கண்சிமிட்டி புன்னகைத்து
காதல் போதை ஏற்றி விட்டு
கதைபேச அவன் இருவிழி தவிப்பை
கடைக்கண்ணால் நான் ரசிக்க

கல்யாண நாள் குறித்து
உறவுகள் பிரிந்து செல்ல
உடன் இருந்த தோழிகளும்
மெல்ல விலகிச்செல்ல

என் அருகில் மாமன் வந்து
இறுக்கி அணைத்துக்கொண்டு
இதழ் முத்தம் வேண்டும் என்று
இறைஞ்சி கேட்டு நிற்க

மறுப்பதாய் நடித்தாலும்
மனதிற்குள் ஏக்கம் கொள்ள
மங்கை மனம் புரிந்த மாமன்
இதழ் தேன் சுவை ருசிக்க

பிறப்பின் முழுபலனை
இப்பிறவியில் அடைந்து விட்டு
மீசை வைத்த என் ரோசக்கார
மாமன் மார்பில் மரணத்தையும்
வென்று மகிழ்ந்திடும் நாள் தனை
கற்பனைக்கு உயிர் கொடுத்து
கவியாக வடித்து விட்டேன் .

எழுதியவர் : கயல்விழி (24-Dec-14, 10:17 pm)
Tanglish : mamanum naanum
பார்வை : 255

மேலே