காதல் வலி

இடியும் மின்னலுமாய் பெய்த
கோடை மழையில்
இருவரும் இணைந்து நடந்தோமே
நினைவிருக்கிறதா அன்பே !

சாலையில் விழுந்த
ஆலங்கட்டிகளை சேகரித்து
உன் சட்டைப்பையில் வைத்தேனே
நினைவிருக்கிறதா அன்பே !

சொட்ட சொட்ட நனைந்த
உடையால்
நான் குளிரில் நடுங்க
விரலுக்குள் வெப்பம் பாய்ச்சி
என் கரம் கோர்த்தாயே
நினைவிருக்கிறதா அன்பே !

பேருந்து நிழற்குடையில்
பேசாமல் பேசினோமே
ஒரு கோப்பை தேநீரை
இருவருமே பருகினோமே…
நினைவிருக்கிறதா அன்பே !

ஒவ்வொரு கோடையிலும்
இடியும் மின்னலுமாய்
ஆலங்கட்டி மழை பெய்கிறது…..

ஆனால்….

சேர்ந்து நனையத்தான்
நீயில்லை அன்பே !

எழுதியவர் : விக்கி (1-Jan-15, 10:48 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 465

மேலே