இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதை போட்டி -2015

அன்றவளின் விழியிரண்டும்
அவனைக் கவியாக்கிடவே
அவள் கார்கூந்தல் உரசிவந்த
தென்றல்தான் தீண்டிடவே
தீண்ட்த்தகும் இருசாதிகளை
இனம் கண்டு கொண்டார்கள் !

உண்மையான காதல்தான்
எதுவென்று அறியாமலேயே
பெண்மையை கண்ணியமாய்
கண்டதவன் தமிழ் மரபு !
இதயங்கள்தாம் இடம் மாற
இளமை இன்னிசை பாடியது !

சிந்தும் புன்னகை ஒன்றுமட்டும்
சீதனமாய் அவள் கொணர
மஞ்சள் குங்குமம் கொடுத்தவனும்
வஞ்சியவளுக்கு மாலையிட்டான் !
பின்பொருநாள் பெண்மகவை
ஈன்றவளும் தாயானாள் !

காதோரம் நரைவிழுந்தும்
காதலுக்கு குறைவில்லை !
இன்று நோய்ப்பிணி கொண்டவளின்
கண்ணீரில் மனம் நொந்தான் !
விடலை பருவத்தில் விளைந்தாலும்
சுடலை வரை தொடர்வதன்றோ காதல் !

எழுதியவர் : ஜி ராஜன் (5-Jan-15, 2:51 pm)
பார்வை : 127

மேலே