இப்படி நாம் காதலிப்போம் பொங்கல் கவிதை போட்டி 2015

எந்தன் இமை முழுதும்
நின் கனாக்கள் கண்ணுறங்க
கலையாத தவமொன்றில்
நித்தம் ஒரு யுத்தம் வேண்டும்

மூச்சுக் காற்றில்
பற்றி எரியும் பாவை மூங்கிலில்
தனித்தொரு காதல் ராகம்
இசைக்க ஆயிரம் துளைகள்
அதிகமாய் வேண்டும்

விழி சேரும்
கணங்கள் விலகாமல்
நகர்ந்திட காலத்திற்கும்
காதல் கற்பிக்க ஆசையுண்டு

சொற்கள் மறைத்த
நாணம் கொண்டு
செவ்வானம் வரைய
சூரிய தூரிகை
நமக்கென்று வேண்டும்

நரை பூசி
சுருக்கங்களால் அழகு செய்த
தோலாடை கொண்டு இறுதி
நொடிகளைக் கணக்கிடும்
இச்சைகள் மறைந்த வேளையிலும்
இதமாய் மடி சேர வேண்டும்..

எழுதியவர் : கார்த்திகா AK (5-Jan-15, 9:07 pm)
பார்வை : 176

மேலே