உங்களுக்கானது

வாழை இலை
கிழிசலுக்குள்
வழிந்தோடும்
வட்ட நிலா
வெளிச்சத்தில்!!

நீ நிழலாக‌
தீண்டிய இடங்கள்!
ரணங்களோடு!!
சுவாசிக்கின்றன‌
என்னுள்!!!

இரவுக்கும்
பகலுக்கு
இடைப்பட்ட‌
வேளையொன்றில்!!

உன்னால்
புரியப்பட்ட‌
என்னுள்_இன்று
நான் மட்டுமே
லயித்திருக்கிறேன்!!

என் அலைபேசி
அழைப்பிதலில்
மஞ்சள் தடவி
ரசித்த உன்
வெட்கத்தை!!

மொழிபெயர்த்த‌
என் விழிகள்
கார்கால முகிலான‌
அதிசயத்தை
எங்கு சொல்ல!!

நரகவாசலில்
உன் பிரிவு
தனியே எனை
அமர்த்திவிட்டு
சொர்க்கத்தை
சொப்பனத்தில்
சித்தரிக்கிறது!!

நீ திட்டிய‌
பொழுதுகளில்
வீசிய தென்றல்கூட
புயலொன்றை
விட்டுச்செல்கிறது
இப்போது!!

யாருக்கும்
தெரியாமல்
அழுகிறேன்!!
சுற்றிவர
கண்ணாடிகள்
அம்பலப்படுத்தி
ரசித்தன என்
அழுகைகளை!!!

நீ முகராமல்
இறந்துபோன‌
அனிச்சம் பூக்களில்
என்னுயிரின்
ஓர் பாதி
ஒட்டிக்கிடக்கிறது!!!!!

நாளை என்
சுவடுகளுக்கு
அருகாமையில்
உன் பயணம்
தொடரட்டும்!!!

உனக்காகவே
காத்திருக்கும்
என் இருப்பிடத்தை
அவை
அறியப்படுத்தலாம்!!

எழுதியவர் : புலவூரன் ரிஷி (5-Jan-15, 9:13 pm)
பார்வை : 61

மேலே