காத்திருக்கிறேன் - மணியன்

கத்தி இன்றி
ரத்தம் இன்றி
கூடு விட்டு
கூடு பாய்ந்தாய்
என் இதயச் சிறைக்குள் . . . .

உன் ஒளியீர்ப்பு
விழி வட்டத்துள்
என்னை நீயும்
சிறை வைத்தாய் . . . .

கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவு கணையாய்
என் உயிர் வரைத் தாக்குதடா
உன் விழி அம்புகள் . . . . . .

என் அசைவும்
என் இசைவும்
என் உயிரும்
உள் மனமும்
தினம் தினம் ஏங்குதடா
உன்னிரு கண்ணசைவுக்காய் . . . .

குறிஞ்சி மலராய்
என் முன் வந்து
அரும்பிய காதலால்
எனை நீயே
அள்ளி இழுத்தாய் . . . . .

வாழ்வும் தாழ்வும்
உன் பார்வைக்காய் .
வளமும் நலமும்
உன் நேசத்துக்காய். .
தினமும் உனையே
எண்ணி ஏங்குதடா . . . . . .

விழி கூட்டிப் பேரலையாய்
விண் தாண்டி
எனைக் கொணர்ந்தாய். . .
என்னிதழ் ஒட்டி
உன் பெயரை
தினம் தினம்
உச்சரிக்கிறேன் நான் . . . .

காலம் உள்ளவரை
காதல் தந்த என்னவரை
கரம் பிடித்து
கழுத்தினில் நாணேற்ற
காத்திருப்பேன் காதலுடன் . . . . . .














*-*-*-*-*-*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (8-Jan-15, 8:48 pm)
பார்வை : 147

மேலே