கூண்டில் அடைப்பட்ட கிளியாக - உதயா

அன்பிற்கு ஏங்கி
பிள்ளை வரம்கோரி
கோவில் கோவிலாக
ஏறியிறங்கும் அன்னையர்
ஆயிரமிருக்க

என்னை மட்டும்
ஏன் இறைவா
தாய்மை போர்வைக்கொண்ட
சாத்தானுக்கு மகனாக
பிறக்க வைத்தாய் ???

ஈன்றெடுத்த மக்களின்மீது
ஒருசேர அன்பு பொழியும்
தாயிருக்க
ஓரவஞ்சனை செய்யும்
தாய்வேசம் பூண்ட
பேய்க்கு ஏன் இறைவா
என்னை மகனாக
பிறக்க வைத்தாய் ???

கொடுமைகள் வானைமீறினும்
காலனை நாடவிடாமல்
அன்புபோழியும்
தங்கையை ஏன் இறைவா
எமக்கு தாயாக
படைக்கவில்லை ???

வஞ்சகங்கள்
வரையறையை மீறினும்
எமனை தேடவிடாமல்
பாசத்தில் பாவையைமிஞ்சும்
தந்தையை ஏன் இறைவா
எமக்கு தாயாக
படைக்கவில்லை ???

தாயெனும்வேஷம் பூண்ட
பிசாசுக்கு இரையாகவும்
தங்கை தந்தை
அன்புக்கடலில்
ஒளிரும் முத்தாகவும்
ஏன் இறைவா எனை
படைத்தாய் ???

கூண்டில் அடைப்பட்ட கிளியாக தான் நான்
விடுப்பு கிடைத்தும் பறக்க முடியா நிலை தான் ................

எழுதியவர் : uthayakumar (12-Jan-15, 5:42 pm)
பார்வை : 107

மேலே