இப்படி நாம் காதலிப்போம் “பொங்கல் கவிதை போட்டி 2015”

தாவணி போட்ட தட்டை குச்சி
அட்டை போல ஒட்டிகிச்சி
சட்டையில பொத்தான போல - நீ
கட்டையில போற வரை நானிருப்பேன்னு சொன்னா...........

சங்க காதல்போல எங்க காதல் இல்ல - கட்டியனைக்கிற
உங்க காதல போலவும் , எங்க காதல் இல்ல....
காத்துல கவிதையா கலந்திருக்கும் எங்க மூச்சு -எங்க
காதலுக்கு அதுதான் மௌன பேச்சு.

வண்ண கோலத்துல அவ எண்ணத்த சொல்லிடுவா
சின்ன கோவத்துல என் உள்ளத்தை புரிஞ்சுக்குவா
மிதிபடாத ஓடை மண்ணுல எங்க காதல், வரிகளா வாழ்துகிட்டிருக்கு.
மீதி,கத்தாழை செடியில காவியமா எழுதியிருக்கு.

கல்யாண பேச்சுக்கு கல்லணை கட்டினா ;
சம்மதம் இல்லன்னு சாக்கு சொன்னா
சாதியில நீயும் நானும் ஒண்ணுதானே ;
சாமி குத்தம் ஏதும் இருக்கான்னு கேக்க........

குத்தம் சொல்லுற சாமி நம்ம குலத்துல இல்ல
குத்தம் சொல்லாம இந்த பூமியில யாருமில்ல....
வேசி மகளானாலும் காசிருந்தா ஏத்துக்கிற உலகம் - இந்த
குச்சி வீட்டுகாரிய எதுக்குமா அந்த மச்சி வீட்டு மக்கா ............................

காச பாத்து நாம காதலிக்கல; உடம்புக்காக நாம உருகல
ஆச வார்த்த பேசி அழ வைக்கல ;காத்திருக்க சொல்லி கைவிட்டு போகல
பாச மலையிலே பகலிரவு நடந்தோம்
நேசமெனும் சிகரத்திலே நாம நிம்மதியடைவோம்.

எழுதியவர் : பெ.சு.ஆறுமுகம் (obilee) (12-Jan-15, 5:44 pm)
பார்வை : 84

மேலே