அடையாளம்
சொல்லிக்கொடுத்தபடி..
பேச ஆரம்பித்தோம்..
நமக்கென்று மொழி இல்லை!
சொல்லிக்கொடுத்தபடி..
வளர்ந்தோம்..அப்போது
வேறொன்றும் தேவை இல்லை..!
சொல்லிக்கொடுத்த படியே
வாழ்கிறோம்..சாதியும் மதங்களும்
சுமந்தபடி..
நமக்கென்று ஒன்றுமே இல்லை!
சொல்லிக்கொள்ளாமல்
போகிறோம்..
எல்லோரும் ..
ஒரே வழி!
..
போனபிறகு..
ஒரே பெயர்தான்..
அடையாளம் தனியாக எதுவும் இல்லை..