தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஒற்றுமை குலைக்கும் பொறாமையை எரித்து!
தமிழை தரம்தாழ்த்தும் எவரையும் மிதித்து !
தமிழே உலகின் முதுமொழியெனும் நினைப்பினை நிறுத்தி
நமக்குள்ளான இணக்கத்தை போக்கி !
மனமகிழ்வோடு தைமகளை வரவேற்போம் வா !

எங்கும் பரவி பல தமிழானாலும்
செம்மொழியானது தாய் தமிழே !
எம்மொழிக்கும் தலையான எம்தமிழ்
இணங்கா மொழியையும் வணங்கிடச்செய்யும் செந்தமிழ் !

செந்தமிழின் மகளாம் தைமகள்
ஐஸ்வர்யம் தந்திடும் பொன்மகள்
அனைவரையும் சமமாய் பாவிக்கும் நன்மகள்
அவளை கொண்டாடி மகிழ்வோம் வா !

வசந்த கால ராணியவள்
வாகை சூடிட வருகிறாள்!
வாழ்விழந்த தமிழருக்கும்
வாழ்வை செழிப்பாக்கும் தேவதையவள் !

பொங்கும் பானை பொங்கட்டும் !
எங்கும் மகிழ்ச்சியில் தமிழர்கள் திளைக்கட்டும்!
மங்கள நாண் கண்டு மணப்பெண்னெல்லாம்
மறுவீடு புகுந்து மகிழ்ச்சியாய் வாழட்டும்...!

"எங்கள் வாழ்வும்! எங்கள் வளமும்!
மங்காத தமிழென்று சங்கே நீ முழங்கு"
கவிதந்த கவிஞனை கண்ட தமிழ்
காலத்தின் முன்னின்று வென்ற தமிழ் !

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !!

எழுதியவர் : கனகரத்தினம் (14-Jan-15, 8:59 am)
பார்வை : 384

சிறந்த கவிதைகள்

மேலே