மனைவிகள் ஜாக்கிரதை

மனைவி ஒருத்தி அவள் கணவனுக்காக காலை டிஃபனுக்கு முட்டை வறுவல் பண்ணிக்கிட்டிருந்தாள்...

திடீர்ன்னு கணவன் கிச்சனுக்குள்ள வந்துட்டான்...

வந்தவன் சும்மா இருந்தானா...


“பார்த்து... பார்த்து! ஒரு காரியத்தை கவனமா பண்ணனும்ன்னு நினைப்பே இல்லையா உனக்கு?”

”சரி இன்னும் கொஞ்சம் வெண்ணெய் போடு...”

என்ன பார்த்துக்கிட்டு சும்மா நிக்கிறே..திருப்பேன் அதை...

”ஐயோ இன்னும் வெண்ணெய் வேணுமே...எங்க போறது வெண்ணெய்க்கு...”

”முட்டை கருகப் போகுது...ஜாக்கிரதை”

”ஜாக்கிரதைன்னு சொல்றேன்...நீ எப்பவும் என் பேச்சை கேட்கிறதே இல்ல...”

”சீக்கிரமா திருப்பி விடு...நீ என்ன லூசா? சொல்றேன் ஜடமா நிக்கிறியே...”

”மூளையை எங்க கொண்டு போய் அடகு வெச்சே...”

”உப்பு போட மறக்காத...ஹிஹிஹி..உனக்கு தெரியுமா...எப்பவும் உப்பு போட மறந்தே போய்டுற நீ...”




மனைவிக்கு கோபம்...மொறைச்சு பார்த்தாள்...



“நீங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க...இந்த முட்டையை கூட எனக்கு சரியா வறுக்க தெரியாம தான் உங்க கூட வாழ்ந்து குப்பை கொட்டுறேனா?”

இப்ப அவன் அமைதியா சொன்னான் பாருங்க...

“உனக்கு ஒரு ட்ரயல் காட்டினேன்மா..

எதுக்கு தெரியுமா...

நான் கார் ஓட்டும் போது நீ இப்படி குறுக்க குறுக்க அட்வைஸ் பண்ணினா, எனக்கு எப்படி ஆத்திரம் வரும்ன்னு...”

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (14-Jan-15, 11:55 pm)
பார்வை : 521

மேலே