தத்துவம் புதிதல்லா
தத்துவம் என்பது தானாய் இருப்பது!
சத்துவம் என்பது சாரமாய்த் திகழ்வது!
உத்தமம் என்பதோ உண்மையாய் நடப்பது!
ஒத்து,நாம் வாழ்வதோ உலகணி யாவதே!
====== ==
நம்பெருமை நாமறியோம்; நாய்வளர்த்தோம் ! பின்பேதான்
அன்பறியப் போனோம் அதால்!
**********
என்றோ ஒளிர்ந்தது ஒருவிண்மீன் எங்கேயோ!
இன்றோ அதைரசிப்பேன் இங்கு!
************
பரதனைப் பார்த்துப் பழகு ஒழுக்கம்!
விரதமாய் ஆட்சி வெறுத்து!
**********
குகனைப்போல் உள்ளம் குளிரன்பைக் காட்டும்
தக(வு)ஆடை யாகத் தரி.
**********
ஒன்று பலவாகி ஒப்பும் மறுப்புமாய்
நின்று நிலைப்ப தெது?
************
எல்லார்க்கும் ஓர்,நிலை உண்டுமேல் கல்விதான்
சொல்வார்க்கும் கேட்பார்க்கும் சொத்து!
***********