தேர்
தேர்
தேரு வருதே!
தேக்கு மரங்களில்
செதுக்கியச் சிற்பங்கள்,
செங்குத்து சீலைகளாய்,
நான்புறம் நன் அலங்கரிக்க,
வாண வெடிகள் பல வண்ணங்களில்,
வானில் பறந்து ஜொலித்தெறிய,
வண்ணக்கொடிகள் மேல் பறந்து
நளினமுடன் நர்த்தனம் புரிய,
நாதஸ்வர ஒலி கூட,
தவில்கள் தாளமிட,
வேத விற்ப்பனர் வேகமுடன்
முறை மொழிய,
மலைப்பாம்பு போன்ற வடமதை,
மக்கள் கூட்டமது,
மகிழ்ச்சியுடன் மேல் இழுக்க,
மேல் மனையின் அரியணையில்
சிங்கார மூர்தியவர்
தொடையினிலே இலக்குமியை
இடையினால் பிடித்தபடி
ஒய்யாரமாய் வீற்றிருந்து
ஆசியுடன் அருளதைதர,
மறவர் சாமரம்வீச
மங்கள ஆரத்தியுடன்,
மகளிர் தூபம் போட,
தேர் சக்கரமதின் அடிதனில்,
எலுமிச்சை பலியிட்டு,
கரவொலி கோஷத்துடன்,
பாசுரங்கள் பலர் பறைய,
கூடியவர் புகழ் பாட,
சக்கரங்கள் அசைந்து,
சிறிதே முன்னேற,
இன்பம் எங்கும் மங்களம் பொங்க,
தேரு வருதே!
சம்பத்