பேடிகள்

பேடிகள்

இருளிலும் நிழல் நினைத்து
அஞ்சும் பேடிகள் பல
நிறைந்த நாம் நாட்டில் இன்று
நேர்மைக்கு இனி இடமேது?

லஞ்சம், ஊழல்கள் பல
நாட்டின் பெயர் கெடுத்து
அரசியல் நரிகள் பல
வீதியில் வலம் புரியும்
நாட்டில் இன்று
நேர்மைக்கு இடம் எது?

எழுச்சிக்கும் எளிமைக்கும்
பெயருற்ற தேசமிது
பண்புக்கும் பற்றிற்கும்
பெயருற்ற நாடுமிது;

அஞ்சும் நெஞ்சங்கள் நாம்
அச்சங்கள் நீங்கிவிட
விழிப்புணர்ச்சியுடன் விழித்தெழுந்து
அல்லல்தரும் நரியினங்களை
அரங்கத்திலிருந்து வெளியேற்றி
நாட்டை காப்பதில்
அவசரம் காட்டிடுவோம்!
Sampath

எழுதியவர் : கல்கத்தா sampath (18-Apr-11, 4:35 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 294

மேலே