அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை

நாட்டில் அரசு மருத்துவமனை
இல்லை அவலம் அதற்கு ஓர் இணை
தலைவிரித்தாடும் லஞ்சம்
இங்கு ஒவ்வோர் இடத்திலும் தஞ்சம்;

ஒரே கட்டிலில் இரு, பல நபர்கள்
ஒரு பெட்டியில் பல சவங்கள்
மறந்துகூட மனிதாபிமானம்
மருந்துக்குகூட அறவே இல்லை;

காலை, மதியம், மாலை உணவில்
அருவற்ற சூழல் யாதிலும் ஊழல்,
பிரிவே பெரிது என்றே கருதி
ஏங்கி தவிக்கும் உயிர்களின் கதறல்;

புதிய குழந்தைகள் பிறந்தது மட்டில்
கடத்தி சென்று விற்றிடும் கும்பல்,
கிடைத்த மருந்தை மடக்கி சென்று
கீழ் கடையில் விற்றிடும் கும்பல்;

உதவிக்கு செவிலிகள் அறவே காணோம்
ஏவலுக்கு ஆட்களை எங்குமே காணோம்,
வேதனையில் வேண்டும் மருத்துவர் காணோம்,
நேர்மை, நல்லாட்சியை இவ்விடம் காணோம்;

ஏழையர் மருத்துவம், எளிதில் பெற்றிட
ஆட்சியாளர் செலுத்தினால் கவனம்
மக்கள் உடன் நலம் வெகு சீர்பெற்று
நாட்டின் உடன் நலமும் சீர் அது பெறுமே!

சம்பத்










எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 4:39 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 312

மேலே