நிலவின் நிழல்

வந்தவாசி வனங்கள்தான்
என் வருடாந்திர
வசந்தங்களை களவாடிய
சென்றன.....

கனவு பொழுதில்
கானக மரங்கள்
பறக்கின்றன,
பாறைகள் மிதக்கின்றன,
நட்சத்திரங்கள் நடக்கின்றன,
இரவுக்கு மூக்கு முளைக்கிறது,
சில நேரங்களில் பயத்தின்
உச்சத்தில் உச்சாபோனதுண்டு,

இந்த கனவுக்கு இரண்டு
காரணங்கள் இருக்கலாம்,
ஒன்று
நான் வெட்டிய மாமரத்தின்
சாபம்,,
இரண்டு
நிலவின் நிழலாய்
சந்திரன் மாமாவும்,
அலமேலு அக்காவும்,
காதல் தோழ்வியால்
அந்த வனத்தில் தொங்கியதாயும்
இருக்கலாம்.....

எதுவென இந்த
விடியலுக்கும் விடைதெரியாமல்
போகலாம்.,

-அ.நா.தாஸ்-

எழுதியவர் : அ.நா.தாஸ் (26-Jan-15, 10:47 pm)
Tanglish : nilavin nizhal
பார்வை : 241

மேலே