கண்களை அழைத்து செல்

நெஞ்சே ....
என்னவனிடம் நீ போ ...
என்னை அழைத்து ...
செல்லாவிடினும் - என்
கண்களை அழைத்து செல் ...!!!

நீ மட்டும் .....
தனியாக போகாதே ...
என் கண்கள் என்னை
கொல்வதுபோல் பார்கின்றன ...!!!

குறள் 1244
+
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 164

எழுதியவர் : கே இனியவன் (28-Jan-15, 10:07 am)
பார்வை : 75

மேலே