விஷத்திற்கு விஷம்

கொத்துதற்கு ஆளின்றி..
விஷம்..
கக்குதற்கு வழியின்றி..
அலைந்தது நாகம்..
சென்றது தவம் செய்யும்
துறவி இடம் நாடி ..
தினமும் வந்து என்னைக் கொத்து..
வர முடியாத போது
தரையில் கொத்தி விஷத்தை கக்கு..
பல் உள்ளவரை..
என்ற துறவியின்
வாக்கு..கேட்டு..
நகர்ந்தது
பாம்பு!
மனதிற்கு புத்தி
சொன்ன வழி !

எழுதியவர் : கருணா (31-Jan-15, 2:24 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 78

மேலே