பிறந்த நாளே இறந்த நாளான கொடுமை -தோழியின் மரணம்

கல்லூரியில் ஒன்றாகி
வகுப்பறையில் உறவானோம்.

ஆடம்பரம் அற்ற உன் அழகினிலே
அனைவரும் தோழிகள் ஆனோம் .

நட்பென்றால் உயிர் என்றாய்
நானே உன் உலகென்றாய்.

இறப்பிலும் பிரியேன் என்றாய்
ஏனடி இன்று பிரிந்து சென்றாய் .?

நள்ளிரவு வரை கண்விழித்தேன்
நண்பியே உனக்கு வாழ்த்துரைக்க

அலைபேசி அழைப்பிற்கு
பதிலில்லை உன்னிடத்தில் .

பாவி நான் வஞ்சித்தேன்
மனதிற்குள்
பாசமில்லை நீ என்று .

அறியவில்லை என் உயிரே
ஆபத்தில் நீ என்று.

நடந்ததென்ன கனவா இது
நானுன்னை இழந்து விட்டேன் ..

நாசக்கார இறைவா மூவெட்டு
வயது தான் இன்று அவளுக்கு

முடித்து விட்டாயே அவள் வாழ்வை
பிரித்து விட்டாயே எங்கள் உயிரை .

மண்ணை முத்தமிட்ட இந்நாளில்
மண்ணுக்குள் புதைகின்றாள் என்தோழி

மனம் தான் இங்கே நிலை மாறுது
உயிர்தோழி முகம் காண தடுமாறுது

மாண்டவளே மீண்டும் வந்துவிடு
உன் மலர் முகம் எனக்கு காட்டிவிடு

மரணம் தழுவியது உன்னையம்மா
துடிக்கின்றேன் நான் இன்று உன்
பிரிவில் அம்மா..:-(

எழுதியவர் : கயல்விழி (1-Feb-15, 10:20 am)
பார்வை : 357

மேலே