கனவை விரிக்குது காதல் நிலாதன் களிப்புடனே - கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை

மனந்தனில் உள்ளெழும் மௌனப் பொழிவில் மயங்கிநின்றேன்;
நினைவதன் நீரலை நெஞ்சினில் பாடுது நேசமென;
புனையுது புன்னகை போற்றும் இதழ்கள் புதுக்கவிதை;
கனவை விரிக்குது காதல் நிலாதன் களிப்புடனே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-25, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே