நான்

கடற்கரை ஓரத்தில்..
விளையாடிய நண்டு ஒன்று..
என்னைப் பார்த்ததும் ஓடி
வளைக்குள் புகவில்லை..
பழக்கமானவன் ..
..
நான் !

என் வெப்ப மூச்சு வாங்கி
குளிர வைக்கும் கடல் காற்று
இன்முகத்தோடு என்னை வரவேற்றது !
..
மகிழ்ந்த நட்பு அலைகள்
ஒன்றன் பின் ஒன்றாய் வந்து
என்னை முத்தமிட்டு மகிழ்ந்தன!
இவைகளுக்கு பழக்கமாகி விட்டவன்
..
நான்..!

என்னைத் தொலைத்த இடம்
இதுவென்பதால் தினம்
என்னைத் தேடி வருபவன் இங்கே..
..
நான்!

கிடைத்தது இன்று ..
நான் தொலைத்தது அல்ல..
இதுவரையில் தொலையாத ஒன்று..
இதுவரையில் இருந்ததே தெரியாத ஒன்று .!
இனி என்றும் தொலைக்கக் கூடாத ஒன்று!
...
நான்!

எழுதியவர் : கருணா (5-Feb-15, 11:19 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : naan
பார்வை : 298

மேலே