கடிதம் காதலியே

என் உயிரே உருவான
உறவுக்கு வணக்கம்...

உனக்கே உனக்காய்
நான் இருக்க - நீ
எதையோ நினைத்து
வாடித் தவிக்க
அதற்காய் நானும் - உன்
அருகில் இருக்க
ஆனால் நீயே
தனிமை விரும்பி
உணவின்றி உறக்கமின்றி
உன்னை வருத்த நினைத்து
நித்தமும் உன் நினைவாய்
உலவும் என்னை
தவிக்கச் செய்தாயே - சகியே!

எனககே எனக்காய் நீ இருக்க
உன்னுள் நானே உயிராய் துடிக்க
வானமும் வசப்பட்டதாய்
களித்த காலம் மறந்தாயோ?

மரணமே ஆனாலும்
பகிர நானிருக்க
சிறு கசப்பால்
தனிக்க நினைத்து - என்னை
தனிமை படுத்தி
எனக்காய் நீயும்
உனக்காய் நானும்
வருந்துவதும் ஏனே?

நீதான் நீயா - இல்லை
நான் தான் நானா - நாமே
ஓர் உயிர் ஈருடல் தானே
தனித்தால் வலி உணரேன்
என நினைத்தாயோ - பேதையே

வலியை காட்டிலும்
தனிமையே நம்மை வீழ்த்துகிறது
விரைவில் வா வென்றெடுப்போம்.

இவன்,

என் உயிரோட்டமான உன்னை
எதிர்நோக்கிக் காத்திருக்கும்

உன்னுடைய நான்.

எழுதியவர் : red 🌞 (6-Feb-15, 9:42 am)
Tanglish : kaditham kathaliye
பார்வை : 80

மேலே