சாளரத்தை தாண்டி

பொறுமையிழந்த ஒரு காலைப் பொழுதில்..
என் வீட்டின் சாளரத்தின் கம்பிகளை
வளைத்தது என் நம்பிக்கை..

பரந்த வானத்தின் பறவைகளை பார்த்து
உயர எழும்பி அது செல்வதை
தடுக்க விருப்பமில்லாமல் அதை ..
அனுப்பி வைத்து விட்டு
அது திரும்பும் வழி பார்த்திருந்தேன்..

இதோ..

என் நம்பிக்கை இன்னும் பெரிதாக வளர்ந்து..
என்னை நோக்கி வருகிறதே..
கையில் கனி ஒன்றை ஏந்தியபடி..

இனி ...

நிரந்தரமாய் சாளரத்தின் கதவுகளை
திறந்து வைப்பேன் என்று
நம்பியது ..நம்பிக்கை!
அதன் நம்பிக்கை வீண்போகவில்லை!
நான்தான் அதை முதலில் நம்பவில்லை!

எழுதியவர் : கருணா (9-Feb-15, 4:54 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 246

மேலே