என்ன உறவு
புதிதான ஓர் உணர்வாய் அன்று
பூத்தாய் என்னுயிரில் வந்து !
இதுவென்ன உறவென்று தெரியாமல்
முழித்தேனே நின்று !
விழியுருக கையோடி வந்து தடைபோட
மனமுருக உன் அன்பே முதல் மருந்தாக
மற்றுமொரு தாயாய் உன்னை கண்டேன் !
பொழுதெல்லாம் சிந்தித்தேன் புலனாகவில்லை
வந்த தடம் ஏதும் இல்லை இனி உன்
தடமின்றி தனியே ஓர் பயணமில்லை !
நம்மிடையே என்ன உறவென்று
கேட்போருக்கு என்ன சொல்ல ?
“நட்பு” என்று சொல்வதை தவிர
வேறொன்னும் இல்ல !
நட்புக்கு இணையா எந்த உறவுமில்ல !