முள்ளியில் தள்ளினீர் !

முள்ளியில் முள்வேலிக்குள்
தள்ளினீர் !

விடுதலை வித்துகள்
வேட்டையாடப்பட
வல்லரசுகளும்,நல்லரசுகளும்
கைக்கூலியாய்
நின்றீர் !

சுடும்,கொடும்
கொட்டும் கடும்
ரசாயன குண்டு மழையால்
ஈழ நிலத்தை குருதியில்
மிதக்கச் செய்தீர் !

தமிழர் சொத்துகள்
சூறையாட சோரம்
போனீர் !

ஐக்கிய நாடுகள்
ஐக்கியத்துடன்
புத்த விகாரங்கள்
எழுப்பினீர்!
சுடுக்காட்டை
சுதந்திர நாடென்று
பிரகடனத்திட...

உரிமை,உயிர்
உடைமை
பறித்தீர் !
எங்கள் சவங்களை கூட
மானம் கெடுத்தீர் !

ஈழவர் நெஞ்சுரத்தை
உயர்த்திப் பிடிக்க
ஆயிரமாயிரம்
முத்துக்குமார்
இன்னுமுண்டு !
உறங்காமல்
உளவுப்புலிகள்
தாய் மண்ணிலுண்டு !

பிறப்பொடு பிறந்த
தாய்மண் தாகத்தை
ஈழமொன்றே தணிக்கும் !
தமிழ் நாடொன்று
பிறக்கும்
உரிமைப்போர்
வெடிக்கும்,சத்தியம்
நிச்சியமிது சாத்தியம்...
வாரீர் ! தமிழர்களே
வாரீர் ! பகைவர்
ஓட எழுந்து வாரீர் ! !
தனியொரு நாடு
படைக்க வாரீர் ! ! !

எழுதியவர் : மகா.தமிழ்ப் பிரபாகரன் (21-Apr-11, 6:56 pm)
பார்வை : 487

மேலே