தாயைபோலே .....!
ஜீன்ஸில்* இப்போ தூளிகட்டி
சிணுங்கும் குழந்தையாய் கலாச்சாரத்தை போட்டு
அலற அலற கொடி கயிற்றில்
ஆராரோ ஆரரோ கண்ணுறங்க
அறுந்து போக ஆட்டிவிட்டாலும்
அயல்நாட்டு மோகம் தாலட்டினாலும்
உலர்ந்து போன உடுப்பு வாயும்
ஒப்பாரி வைத்து நூலாய் நைய
ஆணி அடித்து மாட்டி (ற்றி ) சொன்னாலும்
அழுக்கு இப்படி மூக்கையடைக்க
மாசத்துகொருமுறை துவைப்பதுபோலே
மானே தேனே கொஞ்சினாலும்
எந்தன் மூச்சு உள்ள வரையில்
என் மண்ணின் பெருமை அழிக்கவா முடியும்
அம்மா சேலையில் தூளிகட்டி
அருந்தமிழ் குழந்தை கண்ணுறங்க
மூத்தகுடி முச்சங்கம் முத்தமிட
முன்னோடி நாலடியில் தாலாட்ட
உயிர் பிறக்கும்போது அம்மாவென்று
உயர்வான மொழியிங்கு வேறில்லை
ஆவினம் கூட இதை சொல்ல
அற்புத உவமைக்கு வேறில்லை
கனவுகள் மெய்பட கண்ணுறங்க
கலாச்சார சீரழிவு குழந்தையிங்கு
முன்வரி ஜீன்சிலே* மூச்சுவிட
முடிவுரை சொல்லட்டும் காலமிங்கு
கல்தோன்றி முன்தோன்றா கருவினிலே
கர்வத்தோடு பிறந்திட்ட தமிழனென்று
உலகமெல்லாம் சத்தமிட ஆசையுண்டு
உண்மையில் கர்வமென்றால் கடவுள் படைப்பே!
* பிறமொழிச்சொல்